பதிவு செய்த நாள்
23 ஜன2013
00:54
கோவை:நாட்டின் பருத்தி உற்பத்தி, நடப்பு 2012-13ம் பயிர் பருவத்தில் (அக்.,-செப்.,), 3.25 கோடி பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) இருக்கும் என, இந்திய பருத்தி கூட்டமைப்பு (ஐ.சி.எப்.,) தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு பருவத்தில், குஜராத் மாநிலத்தின் பருத்தி உற்பத்தி, 85 லட்சம் பொதிகளாகவும், மகாராஷ்டிர மாநிலத்தில் இதன் உற்பத்தி, 80 லட்சம் பொதிகளாகவும் இருக்குமென, மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, ஆந்திராவில் பருத்தி உற்பத்தி, 68 லட்சம் பொதிகளாகவும், பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இதன் உற்பத்தி, 57 லட்சம் பொதிகளாகவும், மத்திய பிரதேசத்தின் பருத்தி உற்பத்தி, 16 லட்சம் பொதிகளாகவும், இருக்குமென, மதிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகா (11 லட்சம் பொதிகள்), தமிழகம் (5 லட்சம் பொதிகள்), ஒடிசா (2 லட்சம் பொதிகள்) மற்றும் இதர மாநிலங்களிலும் (1 லட்சம் பொதிகள்) பருத்தி உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்குமென, ஐ.சி.எப்.,-ன் செயலர் ஏ.ரமணி தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|