பதிவு செய்த நாள்
23 ஜன2013
00:56
சேலம்:மத்திய பிரதேசத்தில் இருந்து, தமிழகத்துக்கு விற்பனைக்கு வரும் கொண்டைக்கடலையின் வரத்து அதிகரித்து உள்ளது. கடலை பருப்பு:இதையடுத்து, அதை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் கடலை மாவு, கடலை பருப்பு, வறுகடலை ஆகியவற்றின் விலையும் சரிவடைந்துள்ளது.தமிழகத்துக்கு, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இருந்து கொண்டைக்கடலை வரத்து அதிகரித்து உள்ளது.
கடந்த வாரம் வரை, மத்திய பிரதேசத்தில் இருந்து தமிழகத்துக்கு, 50 லாரிகளில் கொண்டைக்கடலை வந்து கொண்டிருந்தது. இது, தற்போது, 100 -125 ஆக உயர்ந்துள்ளது.இதே போல் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு விற்பனைக்கு வரும் கொண்டைக்கடலை வரத்திலும், திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொண்டைக்கடலை விலை, குவிண்டாலுக்கு, 500 ரூபாய் வரையிலும், கிலோவுக்கு, நான்கு ரூபாய் வரையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் வரை, சிகப்பு கொண்டைக் கடலை குவிண்டால், 7,400 ரூபாய்க்கு விற்றது, 6,900 ரூபாயாக சரிவடைந்துள்ளது. சில்லரை விற்பனையில் கிலோ, 75 ரூபாய்க்கு விற்றது, 71 ரூபாயாக குறைந்து உள்ளது. பொட்டுக்கடலை:கொண்டைக்கடலையை மூலப்பொருளாக கொண்டு தயார் செய்யப்படும் கடலை மாவு, பொட்டுக்கடலை (வறுகடலை), கடலை பருப்பு ஆகியவற்றின் மொத்த விலை, குவிண்டாலுக்கு, 450 ரூபாய் வரை, குறைந்துள்ளது.இதைத் தொடர்ந்து வறுகடலையின் விலையும் குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|