பதிவு செய்த நாள்
23 ஜன2013
00:57
மும்பை:கடந்த ஒரு சில தினங்களாக, நன்கு இருந்த பங்கு வியாபாரம், செவ்வாய்கிழமையன்று சுணக்கம் கண்டது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம், சரிவுடன் முடிவடைந்தது.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் மந்தமாகவே இருந்த நிலையில், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய், எரிவாயு, வங்கி, மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 120.25 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,981.57 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 20,156.86 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,952.91 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், கெயில், இந்துஸ்தான் யூனிலிவர் உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், சன்பார்மா, ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 33.80 புள்ளிகள் சரிவடைந்து, 6,048.50 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,101.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,040.50 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|