சிப்பமிடும் தொழிலின் சந்தை மதிப்பு ரூ.2.40 லட்சம் கோடியை எட்டும் சிப்பமிடும் தொழிலின் சந்தை மதிப்பு ரூ.2.40 லட்சம் கோடியை எட்டும் ... நாட்டின் உருக்கு உற்பத்தி 7.67 கோடி டன்னாக வளர்ச்சி நாட்டின் உருக்கு உற்பத்தி 7.67 கோடி டன்னாக வளர்ச்சி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நீண்ட கால டெபாசிட் திட்டத்தை பிரபலப்படுத்த வங்கிகளுக்கு பரிந்துரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2013
23:30

மும்பை: வங்கிகள், ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட வரி விலக்கு கொண்ட, குறித்த கால டெபாசிட் திட்டங்களை பிரபலப்படுத்த வேண்டும் என, ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.வரி விலக்குகே.கே.வோரா தலைமையிலான குழு, வங்கி செயல்பாடுகள் குறித்த அறிக் கையை, ரிசர்வ் வங்கியிடம் அளித்துள்ளது.அதன் விவரம் வருமாறு:வங்கிகள், நீண்ட கால நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு, ஐந்தாண்டிற்கு மேற்பட்ட, குறித்த கால டெபாசிட் திட்டங்களை பிரபலப்படுத்த வேண்டும். இத்திட்டங்கள், வரி விலக்கு சலுகை கொண்டதாக இருக்க வேண்டும்.வங்கிகள், நிலையான வட்டி விகிதத்தில், 30 ஆண்டுகளுக்கான கடன்களை வழங்குவதன் மூலம், கடனாளியின் மாதாந்திர தவணை சுமையை குறைக்க முடியும். இதற்கு, 30 ஆண்டுகால முதிர்வை கொண்ட, அரசு கடன் பத்திரங்களுக்கான, வட்டி விகிதங்களை வரையறுக்க வேண்டும். வங்கிகள் வெளியிடும் கடன்பத்திரங்களில், காப்பீட்டு நிறுவனங்கள், ஓய்வூதிய நிதியங்கள், சேமநல நிதியங்கள் போன்ற பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும்.விழிப்புணர்வு:நிலையான வட்டி விகிதத்தில், நீண்ட கால கடன்களை வழங்கும்போது, ஏழு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வட்டி விகிதங்களை மறுசீரமைக்கலாம். நிலையான வட்டி விகித அடிப்படையில், நிலுவையில் உள்ள கடன்களை முன்னதாகவே முடிப்பதற்கு, வங்கிகள் அபராதம் விதிக்கலாம்.வட்டி விகித மாற்றங்களால், மாதாந்திர தவணையில் ஏற்படும் தாக்கம் குறித்த விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)