நாட்டின் உருக்கு உற்பத்தி 7.67 கோடி டன்னாக வளர்ச்சி நாட்டின் உருக்கு உற்பத்தி 7.67 கோடி டன்னாக வளர்ச்சி ... அரிசி விலை உயரும் அபாயம் அரிசி விலை உயரும் அபாயம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்ற, இறக்கத்தில் பங்கு வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2013
23:35

மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், புதன் கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. நுகர்பொருள் துறையைச் சேர்ந்த இந்துஸ்தான் யூனிலிவரின் நிதி நிலை முடிவுகள், சந்தை எதிர்பார்ப்பிற்கேற்ப சிறப்பாக அமையவில்லை. இதனால், வர்த்தகம் சுணக்கமாக இருந்தது.இருப்பினும், மதியத்திற்கு பிறகான வர்த்தகத்தில், முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே காணப்பட்டது.நேற்றைய பங்கு வியாபாரத்தில், வங்கி, பொறியியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை காணப்பட்டது. அதேசமயம், இதர துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 45.04 சதவீதம் அதிகரித்து, 20,026.61 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,058.07 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,920.91 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 16 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 14 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 5.80 புள்ளிகள் உயர்ந்து, 6,054.30 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,069.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,021.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)