பதிவு செய்த நாள்
24 ஜன2013
08:30
திண்டுக்கல்: தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் இந்த ஆண்டு அனைத்து விளை பொருட்களுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நெல் இருப்பு இல்லாததால், சன்னரக அரிசி விலை கிலோ ரூ.30 லிருந்து ரூ.50 ஆக உயர்ந்தது. தொடர்ந்து விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டதால், அந்தந்த மாவட்ட வியாபாரிகள் ஒன்றிணைந்து வட மாநிலங்களில் இருந்து நெல், அரிசியை கொள்முதல் செய்ய முடிவு செய்தனர். சத்தீஸ்கர், பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து, சில மாதங்களாக நெல், அரிசி கொள்முதல் செய்யப்பட்டது. திண்டுக்கல்லுக்கு 2800 டன் அரிசி, நெல் வந்து சேர்ந்ததால் விலை குறைக்கப்பட்டு கிலோ ரூ.25 லிருந்து ரூ. 28 வரை விற்பனை செய்யப்பட்டது. விலை உயர்வு: ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்க விவசாயிகள், நெல்லுக்கு பிற மாநிலங்களில் கடும் கிராக்கி இருப்பதை புரிந்து கொண்டு விலையை கடுமையாக உயர்த்தியுள்ளனர். இதனால் அந்த மாநிலங்களில் இருந்து இதுவரை நெல் வாங்கி வந்த வியாபாரிகள், தற்போது சத்தீஸ்கர், பீகார், மகாராஷ்டிராவுக்கு செல்கின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து கொண்டிருப்பதை பார்த்த வட மாநில வியாபாரிகள் தங்கள் பங்கிற்கு நெல்லை விற்க மறுத்து விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர். இதனால், மீண்டும் தமிழகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு அரிசி, நெல் விலை கணிசமான அளவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|