நாட்டின் உருக்கு உற்பத்தி 7.67 கோடி டன்னாக வளர்ச்சி நாட்டின் உருக்கு உற்பத்தி 7.67 கோடி டன்னாக வளர்ச்சி ... பார்வையாளரர்களை வெகுவாக கவரும் மினி ஜான் கூப்பர் கார் பார்வையாளரர்களை வெகுவாக கவரும் மினி ஜான் கூப்பர் கார் ...
அரிசி விலை உயரும் அபாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2013
08:30

திண்டுக்கல்: தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் இந்த ஆண்டு அனைத்து விளை பொருட்களுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நெல் இருப்பு இல்லாததால், சன்னரக அரிசி விலை கிலோ ரூ.30 லிருந்து ரூ.50 ஆக உயர்ந்தது. தொடர்ந்து விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டதால், அந்தந்த மாவட்ட வியாபாரிகள் ஒன்றிணைந்து வட மாநிலங்களில் இருந்து நெல், அரிசியை கொள்முதல் செய்ய முடிவு செய்தனர். சத்தீஸ்கர், பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து, சில மாதங்களாக நெல், அரிசி கொள்முதல் செய்யப்பட்டது. திண்டுக்கல்லுக்கு 2800 டன் அரிசி, நெல் வந்து சேர்ந்ததால் விலை குறைக்கப்பட்டு கிலோ ரூ.25 லிருந்து ரூ. 28 வரை விற்பனை செய்யப்பட்டது. விலை உயர்வு: ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்க விவசாயிகள், நெல்லுக்கு பிற மாநிலங்களில் கடும் கிராக்கி இருப்பதை புரிந்து கொண்டு விலையை கடுமையாக உயர்த்தியுள்ளனர். இதனால் அந்த மாநிலங்களில் இருந்து இதுவரை நெல் வாங்கி வந்த வியாபாரிகள், தற்போது சத்தீஸ்கர், பீகார், மகாராஷ்டிராவுக்கு செல்கின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து கொண்டிருப்பதை பார்த்த வட மாநில வியாபாரிகள் தங்கள் பங்கிற்கு நெல்லை விற்க மறுத்து விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர். இதனால், மீண்டும் தமிழகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு அரிசி, நெல் விலை கணிசமான அளவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)