பதிவு செய்த நாள்
24 ஜன2013
09:06
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (9.04 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 13.41 புள்ளிகள் குறைந்து 20013.20 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 22.85 புள்ளிகள் அதிகரித்து 6077.15 புள்ளிகளோடு காணப் பட்டது.நாட்டின் பங்கு வியாபாரம், புதன் கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. நுகர்பொருள் துறையைச் சேர்ந்த இந்துஸ்தான் யூனிலிவரின் நிதி நிலை முடிவுகள், சந்தை எதிர்பார்ப்பிற்கேற்ப சிறப்பாக அமையவில்லை. இதனால், வர்த்தகம் சுணக்கமாக இருந்தது.இருப்பினும், மதியத்திற்கு பிறகான வர்த்தகத்தில், முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே காணப்பட்டது.நேற்றைய பங்கு வியாபாரத்தில், வங்கி, பொறியியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|