பதிவு செய்த நாள்
25 ஜன2013
00:08
சேலம்:தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை குறைந்ததால், கொத்தமல்லி விளைச்சல் பாதிக்கப் பட்டுள் ளது. இந்நிலையில், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்தும் கொத்தமல்லி வரத்து குறைந்ததால், அதன் விலை, ஒரே நாளில் குவிண்டாலுக்கு, 1,400 ரூபாய் வரை உயர்ந்தது.
தமிழகத்தில் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, மதுரை, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மானாவாரி பயிராகவும், கிணற்று பாசனம் வாயிலாகவும், அதிக அளவில் கொத்த மல்லி பயிரிடப்படுகிறது.
தமிழகத்தில் கொத்தமல்லி விளைச்சல் குறைந்ததால், ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநிலங்களில் இருந்து, வாரத்துக்கு, 50 லாரிகளில் கொத்தமல்லி விற்பனைக்கு வந்து கொண்டு இருந்தது. இது, தற்போது, 20 லாரிகளாக குறைந்து விட்டது.இதையடுத்து,மொத்த வியாபாரிகள், வடமாநில கொத்தமல்லியை பதுக்கி, விலை மேலும் உயர வழி வகுத்துள்ளனர்.
இதன் காரணமாக, நேற்று ஒரே நாளில் ஒரு குவிண்டால் கொத்தமல்லி விலை, 1,400 ரூபாய் அதிகரித்து, 7,400 ரூபாயில் இருந்து 8,800 ரூபாயாக உயர்ந்துள்ளது. இரண்டாம் ரக கொத்தமல்லி, 7,200 ரூபாயில் இருந்து 8,600 ரூபாயாக அதிகரித்துள்ளது. நாட்டு கொத்தமல்லியின் விலை உயர்ந்ததை அடுத்து, பெருவெட்டு ரக (பச்சை) கொத்தமல்லியின் விலையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த ரகம் கடந்த வாரத்தில் கிலோ, 100 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 120 ரூபாயாக உயர்ந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|