பதிவு செய்த நாள்
25 ஜன2013
00:09
நாமக்கல்:தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 320 காசுகளாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. முட்டை விலை, ஒரே நாளில், 22 காசு சரிந்திருப்பது, கோழிப் பண்ணையாளர் மத்தியில், பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டையின் விலை, 342 காசுகளில் இருந்து, 320 காசுகளாக குறைத்து நிர்ணயம் செய்யப் பட்டது.ஒரு மாதத்துக்கு மேலாக, முட்டையின் விலை ஏறுமுகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில், 22 காசு சரிவடைந்துள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, நாமக்கல் மண்டல சேர்மன் டாக்டர் செல்வராஜ் கூறியதாவது:வட மாநிலங்களில், குளிர்காலத்தையொட்டி, முட்டை நுகர்வு குறைந்துள்ளது. இதனால், முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:சென்னை, 340 காசு, பெங்களூரு, 320, மைசூரு, 335, ஐதராபாத், 315, மும்பை, 347, விஜயவாடா, 315, கோல்கட்டா, 365, பார்வாலா, 301, டில்லி, 328 காசுகள்.
நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக் கோழி விலை கிலோ, 39 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை கிலோ, 78 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|