பதிவு செய்த நாள்
25 ஜன2013
00:10
புதுடில்லி:சென்ற டிசம்பர் மாதத்தில், நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தி, 333.30 கோடி கனமீட்டராக குறைந்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 391.50 கோடி கனமீட்டராக அதிகரித்து காணப்பட்டது.
இதே மாதங்களில், உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி, 31.73 லட்சம் டன்னிலிருந்து, 32.06 லட்சம் டன்னாக சற்று அதிகரித்திருந்தது. அதே போன்று, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி, 1.48 கோடி டன்னிலிருந்து, 1.55 கோடி டன்னாக உயர்ந்திருந்தது. மதிப்பீட்டு மாதத்தில், பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை, 1.30 கோடி டன்னிலிருந்து, 1.34 கோடி டன்னாக அதிகரித்திருந்தது.
கடந்த டிசம்பரில், உள்நாட்டில் சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும், 18 பொதுத் துறை மற்றும் 2 தனியார் துறை நிறுவனங்களுமாக, 1.51 கோடி டன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யஉள்ளன.இது, கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 1.39 கோடி டன்னாக இருந்தது என, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|