பதிவு செய்த நாள்
25 ஜன2013
00:17

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக்கிழமையன்று, மிகவும் மோசமாக இருந்தது. லாப நோக்கம் கருதி, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டது. நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம்உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், நுகர்பொருட்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 102.83 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,923.78 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,072.28 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,884.20 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா பவர், கெயில் உள்ளிட்ட, 20 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், இந்துஸ்தான் யூனிலிவர், ஐ.டி.சி., உள்ளிட்ட, 10 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 34.95 புள்ளிகள் சரிவடைந்து, 6,019.35 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 6,065.30 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 6,007.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|