இந்திய நிறுவனங்களின்அன்னிய கடன் ரூ.6,325 கோடிஇந்திய நிறுவனங்களின்அன்னிய கடன் ரூ.6,325 கோடி ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.304 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.304 குறைவு ...
ஐ.டி., துறையில் 2.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2013
01:08

டாவோஸ்:தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.,), நடப்பாண்டில், 2.30 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறு வார்கள் என, இன்போசிஸ் நிறுவனத்தின் செயல் இணை தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து விட்டது. ஐரோப்பிய நாடுகள் பிளவுபடாமல், ஒன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கை, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதார வளர்ச்சி, ஒரு நிலைக்கு வரும் சூழல் உருவாகி யுள்ளது.இது போன்ற காரணங்களால், கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு, ஐ.டி., துறையின் வளர்ச்சி நன்கு இருக்கும் என, தெரிகிறது.
இவ்வளர்ச்சியின் எதிரொலியாக, ஐ.டி., துறையில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்தியாவில், தற்போது ஐ.டி., துறையில் 25 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இத்துறை,10 சதவீதம் வளர்ச்சி கண்டால் கூட, 2 - 2.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.எனினும், எனது கணிப்பின்படி, நடப்பாண்டில், ஐ.டி., துறை 7 சதவீதம் வளர்ச்சி காணும்.முதலீட்டிற்கு இதுவே சரியான சூழல்.அண்மைக்காலமாக மத்திய அரசு அறிவித்து வரும்,பொருளாதார வளர்ச்சித் திட்டங்களால், அன்னிய முதலீடுகள் அதிகரித்துள்ளன.
இந்த சாதகமான அம்சத்தால், இந்தியாவில் அன்னிய முதலீடு நன்கு வளர்ச்சி காணத் துவங்கியுள்ளது. இதனால், ஐ.டி., துறை, நடப்பாண்டில், ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட சதவீத வளர்ச்சியை காணும். இவ்வாறு கோபால கிருஷ்ணன் கூறினார்.இதனிடையே, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.டி.,சேவைகள் துறையின் வளர்ச்சி, கடந்த 2012ம் ஆண்டு, 1.8 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு 2013ம் ஆண்டில், 5.2 சத வீதம் வளர்ச்சி கண்டு, 92,700 கோடி டாலராக உயரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)