பதிவு செய்த நாள்
19 டிச2008
11:03
மும்பை : ஐசிஐசிஐ பேங்க்கின் புதிய எம்.டி., மற்றும் சி.இ.ஓ., வாக , சந்தா கோச்சர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இப்போது எம்.டி., மற்றும் சி.இ.ஓ.,வாக இருக்கும் கே.பி.காமத் வரும் 2009 ஏப்ரல் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதன்பின் அவர் அந்த வங்கியின் நான் - எக்ஸிகூவிவ் சேர்மனாக இருப்பார் என்றும், புதிய எம்.டி., மற்றும் சி.இ.ஓ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சந்தா கோச்சர் மே ஒன்றாம் தேதியில் இருந்து அந்த பதிவியில் அமர்வார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. 1984 ம் வருடம் பயிற்சி நிர்வாகியாக ஐசிஐசிஐ வங்கியில் சேர்ந்த சந்தா கோச்சர், 1993ம் வருடம் அந்த வங்கி, ஒரு வர்த்தக வங்கியாக மாறினபோது, அதன் நிர்வாகத்தில் முக்கிய பதவியை பெற்றார். பின்னர் 2001ல் எக்ஸிகூடிவ் டைரக்டராக ஆன சந்தா கோச்சர், 2006ல் டெபுடி மேனேஜிங் டைரக்டராக நியமிக்கப்பட்டார். தன் மீது நம்பிக்கை வைத்து தன்வை புது எம்.டி.,யாக தேர்ந்தெடுத்த போர்ட் ஆஃப் டைரக்டர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்ட அவர், வங்கியின் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் வங்கியை நடத்தி செல்ல இருப்பதாக தெரிவித்தார். அமெரிக்காவின் பிரபல ஃபார்சூன் இதழில்,ற உலக அளவிலான சிறந்த பெண் நிர்வாகி லிஸ்ட்டில் இவர் பெயர் அடிக்கடி இடம் பெறும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|