பதிவு செய்த நாள்
27 ஜன2013
00:06
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், மத்திய அரசின், உர மானியம், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு, வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், விவசாயிகளின் நலன் கருதியும், பல்வேறு ரசாயன உரங்களை மானிய விலையில் வழங்குகிறது.இவ்வகையில், நடப்பு நிதியாண்டிற்கான, மத்திய பட்ஜெட்டில், உர மானியச் செலவிற்காக, 61 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த மானியச் செலவு கூடுதலாக, 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இருக்குமென, மதிப்பிடப்பட்டுள்ளது.மத்திய அரசு, டீ.ஏ.பி., எம்.ஓ.பி., உள்ளிட்ட உரங்களை மானிய விலையில், விவசாயிகளுக்கு அளித்து வருகிறது.இந்நிலையில், கடந்த எட்டு மாதங்களாக மத்திய அரசு, உரத் துறை நிறுவனங்களுக்கு, மானியம் எதுவும் வழங்கவில்லை என, இந்திய உரத் தொழிலக கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் சதீஷ் சந்தர் தெரிவித்துள்ளார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|