பதிவு செய்த நாள்
27 ஜன2013
00:10
புதுடில்லி:இந்திய உணவுக் கழகம், வரும் 2013-14ம் ஆண்டின் சந்தைப்படுத்தும் பருவத்தில், 4.20 கோடி டன் கோதுமையை கொள்முதல் செய்யும் என, மதிப்பிடப் பட்டுள்ளது.
மானிய விலை:பொதுத் துறையை சேர்ந்த இந்திய உணவுக் கழகம் (எப்.சி.ஐ.,), விவசாயிகளிடம் இருந்து, அரசு நிர்ணயித்துள்ள, குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது. இந்த உணவு தானியங்கள், அரசு மானிய உதவியுடன், பொது வினியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப் படுகின் றன.இதன்படி, நடப்பு 2012-13ம் ஆண்டு சந்தைப்படுத்தும் பருவத்தில், எப்.சி.ஐ., 3.85 கோடி டன் கோதுமையை கொள் முதல் செய்துள்ளது. பொதுவாக, ஏப்ரல் 1ம் தேதி முதல், ஜூன் இறுதி வரை, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இருந்து கோதுமை கொள்முதல் துவங்கும்.
ஒரு குவிண்டால் கோதுமையின் கொள்முதல் விலை, 1,350 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.வரும் சந்தைப் பருவத்தில், பஞ்சாப் மாநிலத்தில், 1.65 கோடி டன் கோதுமை உற்பத்தியாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், 1.40 கோடி டன் கோதுமையை, எப்.சி.ஐ., கொள்முதல் செய்யும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்தியபிரதேசம்:உத்தரபிரதேசத்தில், கோதுமை உற்பத்தி, 3.32 கோடி டன்னாகவும், எப்.சி.ஐ., கொள்முதல், 50 லட்சம் டன்னாகவும் இருக்கும் என, தெரிகிறது.இது போன்று, கோதுமை அதிகம் விளையும் மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, மொத்தம், 4-4.20 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்படும் என, தெரிகிறது.வரும் ஜூன் 1ம் தேதி நிலவரப்படி, அரிசி, கோதுமை ஆகியவற்றின் கையிருப்பு, சாதனை அளவாக, 9 - 9.5 கோடி டன்னை எட்டும். இது, சென்ற ஆண்டு இதே காலத்தில், 8.20 கோடி டன்னாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|