பதிவு செய்த நாள்
30 ஜன2013
00:20
மும்பை:போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், உள்நாட்டில் மீன் பிடி தொழிலில், ஆண் டுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக, "அசோசெம்' மதிப்பீடு செய்துள்ளது.
மீன்வளம்:இதுகுறித்து, இந்த அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை விவரம்:இந்தியாவிற்கு சொந்தமான ஆழ் கடல் பகுதிகளில், மீன் வளம் ஏராளமாக உள்ளது. ஆனால், மீன்களை பிடிப்பதற்கு உகந்த படகுகள் இல்லாத தால், அந்த வளத்தை பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை உள்ளது.பாரம்பரிய மீனவ சமூகத்தினர், கடலோர பகுதிகளில் காணப்படும் மீன் வளத்தை அளவிற்கு அதிகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இதனால், கடல்சார் வளங்கள் வேகமாக அழிந்து வருகின்றன. மேலும், கடலோர மண்டலங்களில், மீன் பிடிப்பு பகுதிகள் சுருங்கி வருகின்றன.கடலில் பிடித்த மீன்களை கையாளுவதிலும், பதப்படுத்துவதிலும் உள்ள குறை பாடுகளால், இத்தொழிலில் பெரும் இழப்பு ஏற்படுகிறது.மேலும், உயிரி ரசாயனம் மற்றும் நுண் உயிரி களாலும் மீன்கள் பாதிக்கப்படுகின்றன. இத்துடன், தவறான சந்தை நடைமுறைகள், "பேக்கேஜிங்' குறைபாடு, போதுமான குளிர்பதன கிடங்கு வசதிகள் இல்லாதது போன்றவையும், மீன்கள் சேதமடைய காரணங்களாக உள்ளன. இத் தகைய சேதங்களால், மீனவர் சமுதாயத்திற்கு மட்டுமின்றி, இத்துறை சார்ந்த வர்த்தகர்கள், பதப்படுத்துவோர் மற்றும் இதர துணை தொழில்களில் ஈடுபட்டுள்ளோரும் பாதிக்கப்படுகின்றனர்.
தரமான மீன்களை ஒப்பிடும்போது, தரமற்ற மீன்களின் விலை, 20-25 சதவீதம் குறைவாக உள்ளது.குளிர்பதன கிடங்குகள் மீன் மற்றும் கடல் சார் உணவுத் துறையின் சந்தை மதிப்பு, 61 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இத் துறையின் வளர்ச்சிக்கு, துறைமுகங்களை நவீனப்படுத்தி, குளிர்பதன கிடங்குகளை அதிகரிக்க, மத்திய அரசு முன்வரவேண்டும்.
மேலும், மீன் பிடி தொழில்,மீன் வளர்ப்பு,கடல் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துதல் போன்றவற்றில், சுற்றுச்சூழல் சார்ந்த நிர்வாக நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.குறிப்பாக, மீன்வளசுரண்டலை கண் காணிப் பதற்கான, ஒழுங்குமுறை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.மீனவர்களுக்கு, மீன்களை முறையாக கையாள் வதற்கு பயிற்சி அளித்து, மீன்பிடி படகுகளில், மீன்களை பதப்படுத்தி வைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
மாற்று வழிகள்:கடல் வாழ் உயிரின வளர்ப்பு தொழிலை ஊக்கப்படுத்த, நிலையான மாற்று வழிகளை, அரசு மற்றும் இத்துறை சார்ந்த அனைவரும் உருவாக்குவது அவசியம். இல்லையென்றால், நிலத்தின் தன்மையும், கடல் வாழ் உயிரின வளர்ப்பும் பாதிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|