மீன்பிடி தொழிலில் ஆண்டுக்கு ரூ.15,000 கோடி இழப்பு: "அசோசெம்'மீன்பிடி தொழிலில் ஆண்டுக்கு ரூ.15,000 கோடி இழப்பு: "அசோசெம்' ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.8  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
போதிய மழை இல்லாததால் மஞ்சள் உற்பத்தி பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2013
00:23

புதுடில்லி:நாட்டில், மஞ்சள் விளையும் பகுதிகளில், போதிய அளவிற்கு மழை இல்லாததால், அதன் சாகுபடி குறையும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
முதலிடம்:ஒரு சில மருந்துகள், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில், மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், மருத்துவ குணம் கொண்ட மஞ்சளின் தேவை, உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வேகமாக அதிகரித்து வருகிறது.உலகளவிலான மஞ்சள் உற்பத்தியில், இந்தியா, 75-80 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில், மஞ்சள் உற்பத்தியில், தமிழகம்,
ஆந்திரா, மகாராஷ்டிரா,கர்நாடகா, ஒடிசா, மத்தியபிரதேச மாநிலங்களின் பங்களிப்பு, 80 சதவீதமாக உள்ளது. இங்கு, 30-40 டன் மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது.ஒட்டுமொத்த மஞ்சள் உற்பத்தியில், ஆந்திரா, 41 சதவீ தமும்,தமிழகம், 21 சதவீதமும், இதர மாநிலங்களின் பங்களிப்பு 7 சதவீதமாகவும் உள்ளது. ஆந்திராவில், நிஜாமா பாத், தமிழகத்தில் ஈரோடு, மகாராஷ்டிராவில் சாங்லி ஆகியவை, நாட்டின் மிகப் பெரிய மஞ்சள் சந்தை களாக விளங்குகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் வறட்சி காரணமாக, மஞ்சள் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இதே போல், நாட்டின் பிற பகுதிகளிலும், குறைந்த மழை காரணமாக, மஞ்சள் உற்பத்தி குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. சந்தைக்கு வரும் அறுவடை செய்யப்பட்ட மஞ்சளின் வரத்து, 40 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பற்றாக்குறை:எனினும், விவசாயிகளிடம், அதிக அளவில் கையிருப்பில் உள்ள பழைய மஞ்சள், சந்தைக்கு வரும் என்பதால், மஞ்சளுக்கு பற்றாக்குறை ஏற்படவும், விலை உயரவும் வாய்ப்புஇல்லை என, வர்த்தகர்கள் தெரி வித்தனர்.வரும் ஜூலை மாதத்திற்குப் பிறகே, மஞ்சள் விலை உயரும் என, தெரிகிறது.தற்போது, முன்பேர சந்தை யில், தின வர்த்தகத்தில், ஒரு குவிண்டால் மஞ்சள், 5,600 ரூபாய் வரை விலை போய்கொண்டுள்ளது.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், 79,500 டன் மஞ்சள் ஏற்றுமதி ஆனது. இது, முந்தைய நிதிஆண்டை விட, 61 சதவீதம் அதிகமாகும். மஞ்சள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவும், மஞ்சள் விலையை சுயமாக நிர்ணயம் செய்ய அனுமதி கோரியும், மஞ்சள் விவசாயிகள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)