பதிவு செய்த நாள்
31 ஜன2013
00:35
குன்னூர்:ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை, வரும், 2016ம் ஆண்டிற்குள், 2.50 கோடி கிலோவாக உயர்த்த, தேயிலை வாரியம் திட்டமிட்டுள்ளது.நீலகிரியிலிருந்து ஈரான் நாட்டுக்கு, அதிகளவில் தேயிலை ஏற்றுமதி செய் யப்படுகிறது. குறிப்பாக, "ஆர்தோடக்ஸ்' ரக தேயிலைக்கு, அங்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஈரானில், ஒரு கிலோ இந்திய தேயிலைக்கு, 4.5 டாலர் (225 ரூபாய்) கிடைக்கிறது.
ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி, 2011ல், 1.33 கோடி கிலோவாக இருந்தது. 2012ல் இது, 1.59 கோடி கிலோவாக உயர்ந்தது. இதன் வாயிலாக, இந்தியா வுக்கு, 285 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.இந்நிலையில், 2016க்குள், ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை, 2.50 கோடி கிலோவாக உயர்த்த, தேயிலை வாரியம் திட்டமிட்டு உள்ளது.இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, வரும் ஆகஸ்ட் மாதம், துபாயில் செயல்பட்டு வரும், தேயிலை வாரிய வர்த்தக பிரிவின் இயக்குனர் ஜார்ஜ் ஜென்னர் தலைமையில், ஈரான் தேயிலை கழக அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் கொண்ட குழு, நீலகிரிக்கு வர உள்ளது.
அதற்கு முன், தேயிலை வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், மார்ச் மாதம், இந்தியாவில் இருந்து ஓர் உயர்மட்ட குழு, ஈரான் செல்கிறது.இது குறித்து, கோத்தாரி வேளாண் மேலாண்மை ஆலோசகர் சுந்தர் கூறுகையில், "தேயிலை வாரியத்தின் இத்தகைய முயற்சியால், ஈரான் நாட்டுக்கான தேயிலை ஏற்றுமதி, தற்போது உள்ளதை விட, மேலும் அதிகரிக்கும். இதனால், நாட்டுக்கு அதிக வருவாய் கிடைப்பதுடன், தேயிலை விவசாயிகளும் பயனடைவர்,' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|