இந்தியரின் நம்பிக்கை பிராண்டு"நோக்கியா' தொடர்ந்து முதலிடம்இந்தியரின் நம்பிக்கை பிராண்டு"நோக்கியா' தொடர்ந்து முதலிடம் ... உருளைக்கிழங்கு விலை குவிண்டாலுக்கு ரூ.100 சரிவு உருளைக்கிழங்கு விலை குவிண்டாலுக்கு ரூ.100 சரிவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை உயர்த்த திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2013
00:35

குன்னூர்:ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை, வரும், 2016ம் ஆண்டிற்குள், 2.50 கோடி கிலோவாக உயர்த்த, தேயிலை வாரியம் திட்டமிட்டுள்ளது.நீலகிரியிலிருந்து ஈரான் நாட்டுக்கு, அதிகளவில் தேயிலை ஏற்றுமதி செய் யப்படுகிறது. குறிப்பாக, "ஆர்தோடக்ஸ்' ரக தேயிலைக்கு, அங்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஈரானில், ஒரு கிலோ இந்திய தேயிலைக்கு, 4.5 டாலர் (225 ரூபாய்) கிடைக்கிறது.
ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி, 2011ல், 1.33 கோடி கிலோவாக இருந்தது. 2012ல் இது, 1.59 கோடி கிலோவாக உயர்ந்தது. இதன் வாயிலாக, இந்தியா வுக்கு, 285 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.இந்நிலையில், 2016க்குள், ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை, 2.50 கோடி கிலோவாக உயர்த்த, தேயிலை வாரியம் திட்டமிட்டு உள்ளது.இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, வரும் ஆகஸ்ட் மாதம், துபாயில் செயல்பட்டு வரும், தேயிலை வாரிய வர்த்தக பிரிவின் இயக்குனர் ஜார்ஜ் ஜென்னர் தலைமையில், ஈரான் தேயிலை கழக அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் கொண்ட குழு, நீலகிரிக்கு வர உள்ளது.
அதற்கு முன், தேயிலை வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், மார்ச் மாதம், இந்தியாவில் இருந்து ஓர் உயர்மட்ட குழு, ஈரான் செல்கிறது.இது குறித்து, கோத்தாரி வேளாண் மேலாண்மை ஆலோசகர் சுந்தர் கூறுகையில், "தேயிலை வாரியத்தின் இத்தகைய முயற்சியால், ஈரான் நாட்டுக்கான தேயிலை ஏற்றுமதி, தற்போது உள்ளதை விட, மேலும் அதிகரிக்கும். இதனால், நாட்டுக்கு அதிக வருவாய் கிடைப்பதுடன், தேயிலை விவசாயிகளும் பயனடைவர்,' என்றார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)