பதிவு செய்த நாள்
31 ஜன2013
00:40
கோல்கட்டா:உருளைக்கிழங்கு உற்பத்தி மற்றும் வரத்து அதிகரிப்பால், மேற்கு வங்கத்தில், உருளைக்கிழங்கின் விலை, குவிண்டாலுக்கு, 100 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த மாதம், இதன் விலை, குவிண்டாலுக்கு, 150-200 ரூபாய் வரை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அறுவடை காலம்:மொத்த விலை சந்தையில், ஒரு குவிண்டால் உருளைக்கிழங்கின் விலை, தற்போது, 500-550 ரூபாயாக சரிவடைந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக, இதன் விலை, 600-650 ரூபாயாக இருந்தது என, மேற்கு வங்க மண்டியின் சங்கத் தலைவர், ராம் பாத பால் தெரிவித்தார்.பொதுவாக, மேற்கு வங்கத்தில், உருளைக்கிழங்கு அறுவடை, டிசம்பரில் துவங்கி, பிப்ரவரி மாதம் வரை மேற்கொள்ளப்படும். ஒரு சில இடங் களில், மார்ச் மாதம், 15ம் தேதி வரை நீடிக்கும்.
தற்போது,உருளைக்கிழங்கு உற்பத்தி, அதிகரித்துள்ளதையடுத்து, சந்தைக்கு இதன் வரத்து, படிப்படியாக உயர்ந்து வருகிறது.நடப்பாண்டில், மேற்கு வங்கத்தில்,உருளைக்கிழங்கு, சாகுபடி பரப்பளவு, கடந்த ஆண்டை விட, 4-5 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாண்டு, இம்மாநிலத்தில், உருளைக்கிழங்கு உற்பத்தி, 1 கோடி டன்னை எட்டும் என, முதல் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை:இது, கடந்த 2011-12ம் பருவத்தில், 85 லட்சம் டன்னாக இருந்தது. உருளை கிழங்கு சாகுபடிக்கு ஏற்ற பருவநிலை உள்ளதால், இதன் உற்பத்தி, முதல் மதிப்பீட்டை விட அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதன் விலை, மேலும் சரிவடைய வாய்ப்புள்ளது என, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.நடப்பாண்டில், நாடு தழுவிய அளவில், உருளைக்கிழங்கு உற்பத்தி,தேவையை விட அதிகரிக்கும்என, எதிர்பார்க்கபடு கிறது. அவ் வாறு இதன் உற்பத்தி நன்கு இருக்கும் நிலையில், இதன் விலை மேலும் குறையும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|