பதிவு செய்த நாள்
31 ஜன2013
00:41
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. குறிப்பிட்ட சில நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, முதலீட்டாளர்கள், முதலீடு மேற்கொண்டதை யடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சற்று ஏற்றத்துடன் முடிவடைந்தது.
கடந்த, 18 மாதங்களில் இல்லாத அளவாக, இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் ஏற்றம் கண்டது. அதேசமயம், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம்,ஏற்ற, இறக்கமின்றி காணப்பட்டதுநேற்றைய வர்த்தகத் தில்,ரியல் எஸ்டேட்,நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய், எரிவாயு, ஆரோக்கிய பராமரிப்பு ஆகிய துறை களைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
அதேசமயம், பொறியியல், மின்சாரம், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 14.10 புள்ளிகள் அதிகரித்து, 20,005 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இதன் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,073.46 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,964.64 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 12 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 18 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 5.85 புள்ளிகள் உயர்ந்து, 6,055.75 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,071.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,044.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|