பதிவு செய்த நாள்
31 ஜன2013
00:44
மும்பை:பங்குச்சந்தை பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்ட நிறுவனங்களால், முதலீட்டாளர்களுக்கு, 12,145 கோடி ரூபாய் திரும்ப கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீக்கம்:கடந்த 1992ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை, பல்வேறு காரணங்களால், பங்குச் சந்தை பட்டியலில் இருந்து, 1,450 நிறுவனங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டன. இதனால், இந்நிறுவன பங்குகளில், 61 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடு முடங்கி போனது.தற்போது, 'செபி'யின் விதிமுறைகளை பின்பற்றிய, பல நிறுவனங்கள், மீண்டும் பங்குச் சந்தை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பங்குகள் மீதான வர்த்தகம் நடைபெறுவதை யொட்டி, முதலீட்டாளர்கள், 12,145 கோடி ரூபாய் அளவிலான தங்கள் முதலீட்டை திரும்ப பெறுவார்கள் என, சி.என்.ஐ. வெளியிட்டுள்ள ஆய்வுஅறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் முதல் சென்ற 2012ம் ஆண்டு நவம்பர் வரையிலான காலத்தில், 250 நிறுவனங்கள், பங்குச் சந்தை பட்டியலில் மீண்டும் இடம் பிடித்துள்ளன. வர்த்தகம்:இப்பங்குகள் மீது வர்த்தகம் நடைபெறுவதையொட்டி, இந்நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு, தற்போது, 12,145 கோடி ரூபாயாக உள்ளது.இதர, 1,200 நிறுவனங்களும், பங்குச் சந்தை பட்டியலில் மீண்டும் இடம்பெற்றால், முதலீட்டாளர்களுக்கு, 58,296 கோடி ரூபாய் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|