உருளைக்கிழங்கு விலை குவிண்டாலுக்கு ரூ.100 சரிவுஉருளைக்கிழங்கு விலை குவிண்டாலுக்கு ரூ.100 சரிவு ... ரூ.100 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் உற்பத்தி நிறுவனம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் உற்பத்தி நிறுவனம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நவரத்தினங்கள் ஏற்றுமதி 15 சதவீதம் வளர்ச்சி காணும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2013
00:47

மும்பை:நடப்பு 2013ம் ஆண்டில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, கடந்த ஆண்டை விட, 15 சதவீதம் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 2.11 லட்சம் கோடி ரூபாயாக (3,828 கோடி டாலர்) இருந்தது என, இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி கவுன்சிலின் துணை தலைவர் பங்கஜ் குமார் பரேக் தெரிவித்தார்.
மதிப்பீடு:இதே போன்று, நடப்பாண்டில், வெள்ளி பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 25-30 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,384 கோடி ரூபாயாக (79.70 கோடி டாலர்) உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.மொத்த நவ ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியில், அமெரிக்கா அதிக பங்களிப்பை கொண்டு உள்ளது. இந் நிலையில், இந்திய ஆபரண ஏற்றுமதியாளர்கள், பாரம்பரிய நாடுகள் தவிர, புதிய சந்தைகளுக்கும், இவற்றை ஏற்றுமதி செய்ய துவங்கியுள்ளனர்.உலகளவில், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின், பொருளாதார சுணக்க நிலையால், கடந்த 2012ம் ஆண்டில், நாட்டின்
நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 17 சதவீதம் குறைந்து, 3,828 டாலராக குறைந்துள்ளது. அதே சமயம், கடந்த 2011ம் ஆண்டில், இவற்றின் ஏற்றுமதி, 4,636 கோடி டாலராக இருந்தது (2.55 லட்சம் கோடிரூபாய்) என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், மத்திய அரசு, நறுக்கப்பட்ட மற்றும் மெருகேற்றப்பட்ட வைர இறக்குமதி மீது, 2 சதவீத தீர்வை விதித்தது. இதனால், சென்ற ஆண்டில், வைரங்கள் ஏற்றுமதி, 37.3 சதவீதம் சரிவடைந்து போனது.
அமெரிக்கா:கடந்த ஆண்டில், நம்நாட்டிலிருந்து, அமெரிக்காவிற்கான நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 610 கோடி டாலராக இருந்தது. இது, நாட்டின் மொத்த நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி யில், 23.4 சதவீதம் ஆகும்.அமெரிக்காவிற்கான, ஆபரணங்கள் ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பு, பெல்ஜி யம் மற்றும் இஸ்ரேல் நாடுகளை விட, அதிகமாக உள்ளது என, இந்த கவுன்சிலின் தலைவர் விபுல் ஷா கோல் கட்டாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:தற்போதைய நிலையில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி துறை, பல்வேறு சவால்களை எதிர் கொண்டு வருகிறது. இந்நிலையிலும், நாட்டின் ஆபரணங்கள் துறை, உள்நாடு மற்றும் ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.மத்திய அரசு, நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், 2013-14ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், பல்வேறு புதிய கொள்கை திட்டங்களை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
கச்சா வைரம்:உள்நாட்டு வர்த்தகர்கள் கச்சா வைரத்தை, அதிகளவில் இறக்குமதி செய்து, அவற்றை பட்டை தீட்டி, மெருகேற்றி ஆபரணங்களாக தயாரித்து, ஏற்றுமதி செய்கின்றனர். எனவே, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, கச்சா வைரத்தை இறக்குமதி செய்து கொள்ளும் வகையில், அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக, ஏற்றுமதி நிறுவனங்கள், குறைந்த விலையில், தங்கத்தை இறக்குமதி செய்து கொள்ளவும், வரிகளை குறைக்கும் வகை யிலும், மத்திய அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பங்கஜ் குமார் பரேக், மத்திய அரசை கேட்டுக் கொண்டு உள்ளார்.
இறக்குமதி வரி:கடந்த ஓராண்டில், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான வரி, 600 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் வாடிக்கையாளர்களை மிகவும் பாதிப்பதாக உள்ளது.மேலும், அதிக வரி செலுத்தி, தங்கத்தை இறக்குமதி செய்து, அவற்றை ஆபரணங்களாக தயாரித்து, ஏற்றுமதி செய்யும் போது, சர்வதேச சந்தையின் போட்டியை, இந்திய ஏற்றுமதியாளர்களால் எதிர்கொள்ள முடியாமல் உள்ளது.இவை தவிர, அதிக வரி விதிப்பால், கள்ளத்தனமாக தங்கத்தை கொண்டு வரும் போக்கும் அதிகரித்துள்ளது. இவ்வாறு பரேக் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)