பதிவு செய்த நாள்
31 ஜன2013
09:24
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்க நேர தொடக்கத்தின் (9.04 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.50 புள்ளிகள் குறைந்து 20004.50 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 8.20 புள்ளிகள் அதிகரித்து 6063.95 புள்ளிகளோடு காணப் பட்டது.நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. குறிப்பிட்ட சில நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, முதலீட்டாளர்கள், முதலீடு மேற்கொண்டதை யடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சற்று ஏற்றத்துடன் முடிவடைந்தது. கடந்த, 18 மாதங்களில் இல்லாத அளவாக, இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் ஏற்றம் கண்டது. அதேசமயம், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம்,ஏற்ற, இறக்கமின்றி காணப்பட்டதுநேற்றைய வர்த்தகத் தில்,ரியல் எஸ்டேட்,நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய், எரிவாயு, ஆரோக்கிய பராமரிப்பு ஆகிய துறை களைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|