பதிவு செய்த நாள்
01 பிப்2013
00:10
புதுடில்லி:மத்திய அரசு, "பிராண்டு' சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கான உச்சவரம்பை நீக்கி உள்ளது. அதேசமயம், இவற்றின் ஏற்றுமதிக்கு, குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசு, முடிவு செய்துள்ளது என, மத்திய வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
கட்டுப்பாடு:இதன்படி, 5 கிலோ வீதம், ஆண்டுக்கு, 20 ஆயிரம் டன் வரை, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட "பிராண்டு' சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டு உள்ளது.அதே சமயம், ஒரு டன் "பிராண்டு' சமையல் எண்ணெய்க்கான, குறைந்தபட்ச ஏற்றுமதி விலை, 1,500 டாலராக, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், நாட்டின் மொத்த சமையல் எண்ணெய் தேவையில், 50 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், நம்நாட்டிலிருந்து, அதிகளவில் சமையல் எண்ணெய் ஏற்றுமதியாவதை கட்டுப்படுத்தும் வகையில், இந்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி, கொச்சி துறைமுகம் வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்பட்டுவந்தது. இந்நிலையில், நாட்டின் எல்லா துறை முகங்களில் இருந்தும், இதை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
ஏற்றுமதிக்கு தடை:நம்நாட்டில், ஆண்டுக்கு, 2 கோடி டன் சமையல் எண்ணெய் தேவைப்படுகிறது. இந்நிலையில், உள்நாட்டில் இதன் உற்பத்தி, 70-80 லட்சம் டன் அளவிற்கே உள்ளது. இதை கருத்தில் கொண்டு, சென்ற 2008ம் ஆண்டு முதல், "பிராண்டு' அல்லாத சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|