தங்கம் விலை உயர்வுதங்கம் விலை உயர்வு ... ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
"பிராண்டு' சமையல் எண்ணெய் ஏற்றுமதி மீதான வரம்பு நீக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2013
00:10

புதுடில்லி:மத்திய அரசு, "பிராண்டு' சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கான உச்சவரம்பை நீக்கி உள்ளது. அதேசமயம், இவற்றின் ஏற்றுமதிக்கு, குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசு, முடிவு செய்துள்ளது என, மத்திய வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
கட்டுப்பாடு:இதன்படி, 5 கிலோ வீதம், ஆண்டுக்கு, 20 ஆயிரம் டன் வரை, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட "பிராண்டு' சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டு உள்ளது.அதே சமயம், ஒரு டன் "பிராண்டு' சமையல் எண்ணெய்க்கான, குறைந்தபட்ச ஏற்றுமதி விலை, 1,500 டாலராக, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், நாட்டின் மொத்த சமையல் எண்ணெய் தேவையில், 50 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், நம்நாட்டிலிருந்து, அதிகளவில் சமையல் எண்ணெய் ஏற்றுமதியாவதை கட்டுப்படுத்தும் வகையில், இந்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி, கொச்சி துறைமுகம் வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்பட்டுவந்தது. இந்நிலையில், நாட்டின் எல்லா துறை முகங்களில் இருந்தும், இதை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
ஏற்றுமதிக்கு தடை:நம்நாட்டில், ஆண்டுக்கு, 2 கோடி டன் சமையல் எண்ணெய் தேவைப்படுகிறது. இந்நிலையில், உள்நாட்டில் இதன் உற்பத்தி, 70-80 லட்சம் டன் அளவிற்கே உள்ளது. இதை கருத்தில் கொண்டு, சென்ற 2008ம் ஆண்டு முதல், "பிராண்டு' அல்லாத சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)