தங்கம் விலை உயர்வுதங்கம் விலை உயர்வு ... ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
குன்னூர் ஏல மையத்தில் தேயிலை விற்பனை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2013
00:12

குன்னூர்:குன்னூர் தேயிலை ஏலத்தில், பாகிஸ்தான் வர்த்தகர்கள் மீண்டும் பங்கேற்றுள்ளதால், விற்பனை அதிகரித்து, கூடுதல் விலையும் கிடைத்து வருகிறது.
இந்தியாவின் தேயிலையை, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அதிகளவில் கொள்முதல் செய்கின்றன. ரஷ்யா, 20 சதவீதம் இறக்குமதி செய்து முதலிடத்திலும், 12 சதவீதம் இறக்குமதியுடன், பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும் உள்ளன. சி.டி.சி., தேயிலை தூளை, பாகிஸ்தான் அதிகளவு இறக்குமதி செய்கிறது.
சமீபத்தில், இரு இந்திய வீரர்கள் படுகொலையால், எல்லையில் இரு நாடுகளிடையே பதட்டம் ஏற்பட்டது. குன்னூர் தேயிலை கொள்முதலை, பாகிஸ்தான் நிறுத்தியது. இதனால், குன்னூர் தேயிலை மையத்தில், விற்பனையில் தேக்கம் ஏற்பட்டது. நடப்பாண்டின், இரண்டாம் ஏலத்தில், 81 சதவீத தேயிலை தூள் விற்ற நிலையில், கடந்த வாரம் நடந்த, 3வது ஏலத்தில், 71 சதவீதம் மட்டுமே விற்பனையானது. கடந்த இரு ஏலங்களில், தேயிலையின் விலையிலும் சரிவு ஏற்பட்டது.
தற்போது, எல்லையில் பதட்டம் தணிந்துள்ளதை அடுத்து, பாகிஸ்தான் வர்த்தகர்கள் மீண்டும், தேயிலை கொள்முதலை துவக்கியுள்ளனர். இதன் காரணமாக, கடந்த வாரம் நடந்த, 4வது ஏலத்தில், கூட்டுறவு தேயிலை ஏலத்தில், 92 சதவீத தேயிலை தூள் விற்பனையானது.குன்னூர் தேயிலை வர்த்தகர்கள், சங்க ஏலத்தில், 88 சதவீத தேயிலை தூள் விற்பனையானது. மேலும், ஒரு கிலோவுக்கு, ஒரு ரூபாய் கூடுதல் விலை கிடைத்தது. இதனால், வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)