பதிவு செய்த நாள்
01 பிப்2013
00:12
குன்னூர்:குன்னூர் தேயிலை ஏலத்தில், பாகிஸ்தான் வர்த்தகர்கள் மீண்டும் பங்கேற்றுள்ளதால், விற்பனை அதிகரித்து, கூடுதல் விலையும் கிடைத்து வருகிறது.
இந்தியாவின் தேயிலையை, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அதிகளவில் கொள்முதல் செய்கின்றன. ரஷ்யா, 20 சதவீதம் இறக்குமதி செய்து முதலிடத்திலும், 12 சதவீதம் இறக்குமதியுடன், பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும் உள்ளன. சி.டி.சி., தேயிலை தூளை, பாகிஸ்தான் அதிகளவு இறக்குமதி செய்கிறது.
சமீபத்தில், இரு இந்திய வீரர்கள் படுகொலையால், எல்லையில் இரு நாடுகளிடையே பதட்டம் ஏற்பட்டது. குன்னூர் தேயிலை கொள்முதலை, பாகிஸ்தான் நிறுத்தியது. இதனால், குன்னூர் தேயிலை மையத்தில், விற்பனையில் தேக்கம் ஏற்பட்டது. நடப்பாண்டின், இரண்டாம் ஏலத்தில், 81 சதவீத தேயிலை தூள் விற்ற நிலையில், கடந்த வாரம் நடந்த, 3வது ஏலத்தில், 71 சதவீதம் மட்டுமே விற்பனையானது. கடந்த இரு ஏலங்களில், தேயிலையின் விலையிலும் சரிவு ஏற்பட்டது.
தற்போது, எல்லையில் பதட்டம் தணிந்துள்ளதை அடுத்து, பாகிஸ்தான் வர்த்தகர்கள் மீண்டும், தேயிலை கொள்முதலை துவக்கியுள்ளனர். இதன் காரணமாக, கடந்த வாரம் நடந்த, 4வது ஏலத்தில், கூட்டுறவு தேயிலை ஏலத்தில், 92 சதவீத தேயிலை தூள் விற்பனையானது.குன்னூர் தேயிலை வர்த்தகர்கள், சங்க ஏலத்தில், 88 சதவீத தேயிலை தூள் விற்பனையானது. மேலும், ஒரு கிலோவுக்கு, ஒரு ரூபாய் கூடுதல் விலை கிடைத்தது. இதனால், வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|