பதிவு செய்த நாள்
01 பிப்2013
00:13
புதுடில்லி:இந்தியாவில், நான்கு அல்லது ஐந்து தனியார் நிறுவனங்களுக்கு விரைவில் வங்கி உரிமம் வழங்கப்பட உள்ளது.
கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு, ரிசர்வ் வங்கி, புதிதாக வங்கிகள் துவங்க உரிமம் வழங்க உள்ளது.நெறிமுறைகள்தனியார் துறையில், புதிய வங்கிகளுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்ததை தொடர்ந்து, 2011ம் ஆண்டு, இதற்கான வரைவு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இதில், பெரிய நிறுவனங்கள், வங்கித் துறையில் கால் பதிக்க, 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்பது போன்ற கடுமையான நிபந்தனைகள் இடம் பெற்றுஇருந்தன.
குறிப்பாக, ரியல் எஸ்டேட் அல்லது பங்கு தரகு தொழிலில், 10 சதவீதத்திற்கும் அதிகமான சொத்து அல்லது வருவாய் ஈட்டும் நிறுவனங்கள், வங்கித் தொழிலில் இறங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், இந்த விதிமுறையை, நீக்குமாறு மத்திய நிதி அமைச்சகம் வலியுறுத்தி வந்தது.இந்நிலையில், புதிய தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான, இறுதி வரைவறிக்கையை தயாரிக்கும் பணியில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது.
அடுத்த இரு வாரங்களுக்குள், இந்த வரைவறிக்கை, மத்திய நிதி அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதன் அடிப்படையில், 4-5 புதிய வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என, தெரிகிறது. ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கித் துறையில் கால் பதிக்க ஆர்வமாக உள்ளன.
அனுமதி:இதனிடையே, தொழில் நிறுவனங்கள் வங்கி துவங்குவதற்கான அனுமதி, இறுதி வரைவறிக்கையில் இடம்பெறுமா, இல்லையா என்பது குறித்து தமக்கு ஏதும் தெரியாது என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.விதிமுறைகளை பூர்த்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு, வங்கி துவங்க அனுமதி அளிப்பதில் தவறு ஏதும் இருப்பதாக தாம் நினைக்கவில்லை என, சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|