பதிவு செய்த நாள்
04 பிப்2013
00:12
கோவை:வரும் மே, ஜூன் மாதங்களில், நீர்போக உருளைக்கிழங்கிற்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது என, வேளாண் பல்கலை கூறியுள்ளது.தமிழ்நாடு வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை:தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் ஆய்வில், கடந்த 2011-12ல், தமிழகத்தில் உருளைக்கிழங்கு 2,950 ஹெக்டரில் பயிரிடப்பட்டு, 62,940 டன் உற்பத்தி செய்யப்பட்டது.
திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் மட்டுமே உருளைக்கிழங்கு பயிரிடப்படுகிறது.நீர்போக உருளைக்கிழங்கின் விதைப்பு பணிகள், பிப்ரவரி மாதத்தில் தொடங்கும். மே, ஜூன் மாதங்களில் அறுவடை செய்யப்படும். பிப்ரவரி மாதத்தில் பயிரிடப்படும் நீர்போக உருளைக்கிழங்கிற்கு, வரும் மே, ஜூன் மாதங்களில் கிலோ, 18 முதல், 20 ரூபாய் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இம்மாதங்களில் பிற மாநிலங்களிலிருந்து, இதன் வரத்து குறைவாக இருக்கும். நீலகிரி உருளைக்கிழங்கின் உயர்வான தரத்தால், அதிக விலை கிடைக்கும். இவ்விலையைக் கருத்தில் கொண்டு நீர்போக உருளைக்கிழங்கை சாகுபடி செய்ய, விவசாயிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.இவ்வாறு வேளாண் பல்கலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|