பதிவு செய்த நாள்
04 பிப்2013
09:25
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 108.97 புள்ளிகள் அதிகரித்து 19890.16 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 32.00 புள்ளிகள் அதிகரித்து 6030.90 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்றும் மிகவும் மோசமாக இருந்தது. பார்தி ஏர்டெல், பீ.எச்.இ.எல்., நிறுவனங்கள் மற்றும் சில முன்னணி வங்கிகளின் நிதி நிலை முடிவுகள், சந்தை எதிர்பார்ப்பிற்கு ஏற்ப அமையவில்லை. இதையடுத்து, 'சென்செக்ஸ்' குறியீட்டு எண், கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவிற்கு சரிவடைந்து போனது.இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், பங்கு வியாபாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இருப்பினும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம், விறுவிறுப்புடன் காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|