நெல் சாகுபடி பரப்பு 27 சதவீதம் குறைந்தது:போதிய அளவிற்கு பருவ மழை இல்லாததால்நெல் சாகுபடி பரப்பு 27 சதவீதம் குறைந்தது:போதிய அளவிற்கு பருவ மழை ... ... ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சரிவு ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சரிவு ...
கறிக்கோழி விலை கிடு கிடு ஒரே மாதத்தில் கிலோவுக்கு ரூ.50 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2013
14:03

சேலம்: தமிழகத்தில் கோழித் தீவனங்களின் விலை உயர்வு காரணமாக, கறிக்கோழி விலை, ஒரே மாதத்தில் கிலோவுக்கு, 50 ரூபாய் வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கு தேவையான கறிக்கோழிகள், அதிக அளவில் உடுமலைப்பேட்டை, பல்லடம் ஆகிய இடங்களிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. அது தவிர, அந்தந்த மாவட்டங்களில் குறைந்த அளவில் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் பருவமழை பொய்த்ததன் காரணமாக, கறிக்கோழி தீவனங்களில் முக்கிய பங்கு வகிக்கும் மக்காசோளம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டது. இனால், தீவனங்கள் விலை, கிலோவுக்கு, ஐந்து முதல், 12 ரூபாய் வரை உயர்வு ஏற்பட்டது. இதன் கராணமாக, கறிக்கோழிகள் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் சபரிமலை சீசன் காரணமாக, கறிக்கோழி கிலோ, 100 ரூபாய்க்கும், உயிருடன் கோழி ஒரு கிலோ, 72 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகையின் போது, கறி கிலோ, 120 ரூபாய்க்கும், உயிருடன் கோழி கிலோ, 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கேரளாவில், கறிக்கோழிகளுக்கு வரவேற்பு அதிகரித்ததை அடுத்து, தமிழகத்தில் இருந்து, அதிக அளவில் கறிக்கோழிகள் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால், கறிக்கோழி விலை கிலோவுக்கு மேலும், 10 ரூபாய் அதிகரித்தது. பிப்ரவரி மாதத்தில் மேலும், 20 ரூபாய் அதிகரித்துள்ளது. கறிக்கோழி வியாபாரி முருகன் கூறியதாவது; கோழித் தீவனங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கடும் வறட்சி காரணமாக, தென் மாவட்டங்களில் சிறிய அளவில் நடத்தப்பட்டு வந்த பண்ணைகள் மூடப்பட்டு வருகின்றன. மேலும், கோடை காலம் துவங்கி உள்ளதால், வெப்பம் தாங்காமல், பண்ணைகளில் குஞ்சு பொறிக்கும் கோழிகளுக்கு தன்மை குறைந்து வருவதோடு, குஞ்சுகளும் வெப்பத்தால் இறந்து விடுகின்றன. இதனால், கறிக்கோழிகள் வரத்தில் சரிவு ஏற்பட்டு, 50 ரூபாய் வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)