பதிவு செய்த நாள்
07 பிப்2013
23:45
புதுடில்லி:பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், அடக்க விலைக்கும் குறைவாக டீசலை விற்கும் போக்கு, வரும் 2014-15ம் நிதியாண்டின், முதல் அரையாண்டுடன் முடிவிற்கு வரும். அதாவது, டீசலுக்கான மத்திய அரசின் மானியச் சுமை நீங்கும் என, திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.டில்லியில், இந்திய எரிசக்தி மாநாட்டில் அவர் பேசியதாவது:
டீசல் மீதான மானியச் சுமையை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, வரும் 2014-15ம் நிதியாண்டின், முதல் அரையாண்டிற்குள், டீசல் மீதான மானியச் சுமை நீக்கப்படும்.எரிசக்தி சப்ளை தொடர, மரபு சாரா எரிசக்தி வளங்களை மேம்படுத்துவது அவசியம். இதன்படி, "ஷேல் காஸ்' எனப்படும், பாறை எரிவாயு உற்பத்திக்கான துவக்க ஆய்வு, சாதகமாக இல்லை என்ற போதிலும், அதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராய்ந்து வருகிறது.
இந்தியாவில், சூரிய மின் சக்தி, காற்றாலை மின் சக்தி ஆகியவற்றின் உற்பத்திக்கு அபரிமிதமான வாய்ப்பு உள்ளது. உற்பத்தியாகும் எரிசக்தியை ஒருங்கிணைத்து, பகிர்மான அமைப்பிற்கு கொண்டு செல்வதற்கு சீரிய முயற்சி தேவைப்படும். இவ்வாறு மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.மத்திய அரசு, அண்மையில் டீசல் மீதான கட்டுப்பாட்டை, பகுதி நீக்கம் செய்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள், ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் ஏற்படும், 10 ரூபாய் இழப்பை, மாதந்தோறும் 45-50 காசுகள் என்ற அளவில் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இதன்படி, அடுத்த 19-20 மாதங்களில், எண்ணெய் நிறுவனங்களுக்கு, டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பும், இப்பிரிவிலான, மத்திய அரசின் மானியச் சுமையும் முடிவிற்கு வரும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|