தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு ...  சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஜனவரியில் வருவாய் 20 % வளர்ச்சி சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஜனவரியில் வருவாய் 20 % வளர்ச்சி ...
டீசலுக்கான மானிய செலவு2014ல் முடிவடையும்: மான்டேக் சிங்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2013
23:45

புதுடில்லி:பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், அடக்க விலைக்கும் குறைவாக டீசலை விற்கும் போக்கு, வரும் 2014-15ம் நிதியாண்டின், முதல் அரையாண்டுடன் முடிவிற்கு வரும். அதாவது, டீசலுக்கான மத்திய அரசின் மானியச் சுமை நீங்கும் என, திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.டில்லியில், இந்திய எரிசக்தி மாநாட்டில் அவர் பேசியதாவது:
டீசல் மீதான மானியச் சுமையை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, வரும் 2014-15ம் நிதியாண்டின், முதல் அரையாண்டிற்குள், டீசல் மீதான மானியச் சுமை நீக்கப்படும்.எரிசக்தி சப்ளை தொடர, மரபு சாரா எரிசக்தி வளங்களை மேம்படுத்துவது அவசியம். இதன்படி, "ஷேல் காஸ்' எனப்படும், பாறை எரிவாயு உற்பத்திக்கான துவக்க ஆய்வு, சாதகமாக இல்லை என்ற போதிலும், அதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராய்ந்து வருகிறது.
இந்தியாவில், சூரிய மின் சக்தி, காற்றாலை மின் சக்தி ஆகியவற்றின் உற்பத்திக்கு அபரிமிதமான வாய்ப்பு உள்ளது. உற்பத்தியாகும் எரிசக்தியை ஒருங்கிணைத்து, பகிர்மான அமைப்பிற்கு கொண்டு செல்வதற்கு சீரிய முயற்சி தேவைப்படும். இவ்வாறு மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.மத்திய அரசு, அண்மையில் டீசல் மீதான கட்டுப்பாட்டை, பகுதி நீக்கம் செய்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள், ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் ஏற்படும், 10 ரூபாய் இழப்பை, மாதந்தோறும் 45-50 காசுகள் என்ற அளவில் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இதன்படி, அடுத்த 19-20 மாதங்களில், எண்ணெய் நிறுவனங்களுக்கு, டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பும், இப்பிரிவிலான, மத்திய அரசின் மானியச் சுமையும் முடிவிற்கு வரும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)