டீசலுக்கான மானிய செலவு2014ல் முடிவடையும்: மான்டேக் சிங்டீசலுக்கான மானிய செலவு2014ல் முடிவடையும்: மான்டேக் சிங் ...  சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஜனவரியில் வருவாய் 20 % வளர்ச்சி சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஜனவரியில் வருவாய் 20 % வளர்ச்சி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகளின் உணவுசாரா கடன் 16 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2013
23:46

மும்பை:நடப்பாண்டு, ஜனவரி 25ம் தேதியுடன் முடிவடைந்த இரு வாரங்களில், வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன்,15.83 சதவீதம் வளர்ச்சி கண்டு, 49.46 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது, இதற்கு முந்தைய இரு வார காலத்தில் காணப்பட்ட, 16.2 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, 0.37 சதவீதம் குறைவாகும்.
மதிப்பீடு:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் இது வரையிலுமாக, வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன் வளர்ச்சி, 6.93 சதவீதம் உயர்ந்துள்ளது. எனினும், இந்த வளர்ச்சி, கடந்த 2011-12ம் நிதியாண்டின் இதே காலத்தில், 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.ரிசர்வ் வங்கி, அதன் நிதி ஆய்வுக் கொள்கையில், நடப்பு நிதியாண்டில், வங்கிகள் வழங்கும் உணவு சாரா கடன் வளர்ச்சியை, ஒரு சதவீதம் குறைத்து, 16 சதவீதமாக மதிப்பிட்டிருந்தது.
புதிய திட்டங்களுக்கான கடன் தேவை குறைந்துள்ளது. இருந்தபோதிலும், நடப்பு நான்காவது காலாண்டில், நிறுவனங்களின் நடைமுறை மூலதன கடன் மற்றும் மறு கடன் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நிறுவன கடன் வளர்ச்சி குறைந்துள்ளதால், வங்கிகள், சில்லரை கடன் பிரிவில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இரு வாரங்களில், வங்கிகள் திரட்டிய டெபாசிட், 13.08 சதவீதம் வளர்ச்சி கண்டு, 65.27 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
ஜனவரி 20ம் தேதி வரையிலான இரு வாரங்களில்,வங்கிகளின் மொத்த டெபாசிட், 0.18 சதவீதம் சரிவடைந்து,11,478 கோடி ரூபாயாக காணப்பட்டது.சென்ற ஏப்ரல் முதல் தற்போது வரை, வங்கிகளின் மொத்த டெபாசிட், 6.78 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. நாட்டின் பணவீக்க உயர்வால், டெபாசிட் வாயிலான முதலீட்டாளர்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கம் மற்றும் ரியல்எஸ்டேட் துறைகளில் முதலீடு செய்யத் துவங்கி உள்ளனர்.
டெபாசிட் வளர்ச்சி :பணவீக்கம் குறைந்தால் மட்டுமே, டெபாசிட் வளர்ச்சி நன்கு இருக்கும். ரிசர்வ் வங்கி, சென்ற ஜனவரி 20ம் தேதி, வங்கிகளுக்கான "ரெப்போ', "ரிவர்ஸ் ரெப்போ' மற்றும் ரொக்க இருப்பு விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்தது.இதனால், வங்கித் துறையில் கூடுதலாக, 18 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும். எனினும், தற்போதைய சூழலில், நடப்பு நிதியாண்டிற்கான, 15 சதவீத டெபாசிட் வளர்ச்சி இலக்கை எட்டுவது கடினமே என, இத்துறையை சார்ந்த ஒருவர் தெரிவித்தார்.
சென்ற ஜனவரியில், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் ஆகியவை, டெபாசிட்டுகளுக்கான வட்டியை, 0.25-0.30 சதவீதம் வரை உயர்த்திஉள்ளன. ஆனால், கடனுக்கான தேவை அதிகரிக்காத வரை, டெபாசிட் வட்டியை உயர்த்துவது கடினம் என, ஒரு சில வங்கியாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)