பதிவு செய்த நாள்
07 பிப்2013
23:47
கொச்சி:கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, உள்நாட்டில், இயற்கை ரப்பர் விலை வெகுவாக குறைந்துள்ளது.சர்வதேச பொருளாதார சுணக்க நிலையால், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, டிரக் மற்றும் பேருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தி குறைந்துள்ளது.
இந்தியாவில், இயற்கை ரப்பர் உற்பத்தி, கடந்த மூன்று மாதங்களாக சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், இதன் விலை குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில், இயற்கை ரப்பர் விலை மிகவும் குறைவாக உள்ளது. தற்போது, உள்நாட்டில், ஒரு கிலோ இயற்கை ரப்பர் விலை, 157 ரூபாயாக உள்ளது. இது, பாங்காக் வர்த்தக சந்தையில், 178 ரூபாயாக உள்ளது.
இந்தியாவில், ஒரு கிலோ இயற்கை ரப்பரின் விலை, கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரியில், 188 ரூபாயாகவும், 2011ம் ஆண்டில், 221 ரூபாயாகவும் அதிகரித்து காணப்பட்டது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், சர்வதேச அளவில், இயற்கை ரப்பர் உற்பத்தி, 3.2 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதேசமயம், இதன் பயன்பாடு, 1.1 சதவீதம் குறைந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில், இயற்கை ரப்பர் பயன்பாடு குறைந்ததை அடுத்து, ஒட்டுமொத்த அளவில் இதன் பயன்பாடு குறைந்துள்ளது. கணக்கீட்டு காலத்தில், இந்தியாவில், இதன் உற்பத்தி, 6.93 லட்சம் டன்னாகவும், பயன்பாடு, 7.42 லட்சம் டன்னாகவும் அதிகரித்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|