பதிவு செய்த நாள்
07 பிப்2013
23:48
புதுடில்லி:மத்திய அரசு, நடப்பு, 2013ம் ஆண்டிற்கு, கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, ஒரு குவிண்டாலுக்கு, 150 ரூபாய் உயர்த்தியுள்ளது.மத்திய வேளாண் அமைச்சகம் கேட்டு கொண்டதற்கு இணங்க, நேற்று நடைபெற்ற, பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில், இந்த விலை உயர்வுக்கு, ஒப்புதல் வழங்கப்பட்டது.
வேளாண் அமைச்சகம்:முன்னதாக, மத்திய வேளாண் அமைச்சகம், ஒரு குவிண்டால் முழு கொப்பரை மற்றும் எண்ணெய் கொப்பரைக்கான, குறைந்தபட்ச ஆதரவு விலையை, முறையே, 250 ரூபாய் மற்றும் 200 ரூபாய், உயர்த்தும்படி கேட்டுக்கொண்டது.இந்நிலையில், இரண்டு வகை கொப்பரைகளுக்குமே தலா, 150 ரூபாய் மட்டுமே, உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, எண்ணெய் உற்பத்திக்கான ஒரு குவிண்டால் கொப்பரைக்கான, குறைந்தபட்ச ஆதரவு விலை, 5,250 ரூபாயாகவும், முழு கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, 5,500 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. உள்நாட்டில், 19 லட்சம் ஹெக்டேரில், தென்னை மரங்கள் உள்ளன. இதன் வாயிலாக, 1,475 கோடி தேங்காய்கள், உற்பத்தி ஆவதாக கூறப்படுகிறது.நம் நாட்டில், கேரளா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், தேங்காய் அதிகளவில் உற்பத்தி ஆகிறது.
மகாராஷ்டிரா:மேற்கண்ட மாநிலங்கள் தவிர, அசாம், மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், கோவா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும், குறிப்பிடத்தக்க அளவிற்கு, தேங்காய் உற்பத்தியாவதாக, மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|