டீசலுக்கான மானிய செலவு2014ல் முடிவடையும்: மான்டேக் சிங்டீசலுக்கான மானிய செலவு2014ல் முடிவடையும்: மான்டேக் சிங் ...  சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஜனவரியில் வருவாய் 20 % வளர்ச்சி சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஜனவரியில் வருவாய் 20 % வளர்ச்சி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கொப்பரைக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2013
23:48

புதுடில்லி:மத்திய அரசு, நடப்பு, 2013ம் ஆண்டிற்கு, கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, ஒரு குவிண்டாலுக்கு, 150 ரூபாய் உயர்த்தியுள்ளது.மத்திய வேளாண் அமைச்சகம் கேட்டு கொண்டதற்கு இணங்க, நேற்று நடைபெற்ற, பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில், இந்த விலை உயர்வுக்கு, ஒப்புதல் வழங்கப்பட்டது.
வேளாண் அமைச்சகம்:முன்னதாக, மத்திய வேளாண் அமைச்சகம், ஒரு குவிண்டால் முழு கொப்பரை மற்றும் எண்ணெய் கொப்பரைக்கான, குறைந்தபட்ச ஆதரவு விலையை, முறையே, 250 ரூபாய் மற்றும் 200 ரூபாய், உயர்த்தும்படி கேட்டுக்கொண்டது.இந்நிலையில், இரண்டு வகை கொப்பரைகளுக்குமே தலா, 150 ரூபாய் மட்டுமே, உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, எண்ணெய் உற்பத்திக்கான ஒரு குவிண்டால் கொப்பரைக்கான, குறைந்தபட்ச ஆதரவு விலை, 5,250 ரூபாயாகவும், முழு கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, 5,500 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. உள்நாட்டில், 19 லட்சம் ஹெக்டேரில், தென்னை மரங்கள் உள்ளன. இதன் வாயிலாக, 1,475 கோடி தேங்காய்கள், உற்பத்தி ஆவதாக கூறப்படுகிறது.நம் நாட்டில், கேரளா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், தேங்காய் அதிகளவில் உற்பத்தி ஆகிறது.
மகாராஷ்டிரா:மேற்கண்ட மாநிலங்கள் தவிர, அசாம், மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், கோவா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும், குறிப்பிடத்தக்க அளவிற்கு, தேங்காய் உற்பத்தியாவதாக, மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)