பதிவு செய்த நாள்
07 பிப்2013
23:51
புதுடில்லி:முந்திரி பூக்கும் காலம் தாமதமான நிலையிலும், நடப்பு 2013ம் ஆண்டில், நாட்டின், கச்சா முந்திரி உற்பத்தி, 8 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப் பட்டுள்ளது.
தமிழகம்:உள்நாட்டில், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகம் மற்றும் ஒடிசா மாநிலங்களில், அதிக அளவில், முந்திரி உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில், முந்திரி அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது, வரும் மே மாதம் வரை நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டில், முந்திரி சாகுபடி பரப்பளவு, 22 ஆயிரம் ஹெக்டேர் அதிகரித்து, 9.42 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டில், 9.20 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் இருந்தது. இதில், புதிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள, ஜார்க்கண்ட் மற்றும் வட கிழக்கு மாநிலங்களின் சாகுபடி பரப்பளவும் அடங்கும்.தேசிய தோட்டக்கலை முகமை அமைப்பு, விவசாயிகளிடம் முந்திரி சாகுபடி குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சாகுபடி பரப்பளவு:இதையடுத்து, கடந்த 2005-06ம் ஆண்டிற்கு பிறகு, முந்திரி சாகுபடி பரப்பளவு, ஆண்டுதோறும், கூடுதலாக, 22 ஆயிரம் ஹெக்டேர் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில், கச்சா முந்திரி உற்பத்தி, 8 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த 2012ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (6.93 லட்சம் டன்) விட, 15 சதவீதம் அதிகமாகும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|