டீசலுக்கான மானிய செலவு2014ல் முடிவடையும்: மான்டேக் சிங்டீசலுக்கான மானிய செலவு2014ல் முடிவடையும்: மான்டேக் சிங் ...  சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஜனவரியில் வருவாய் 20 % வளர்ச்சி சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஜனவரியில் வருவாய் 20 % வளர்ச்சி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நாட்டின் முந்திரி உற்பத்தி 8 லட்சம் டன்னாக அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2013
23:51

புதுடில்லி:முந்திரி பூக்கும் காலம் தாமதமான நிலையிலும், நடப்பு 2013ம் ஆண்டில், நாட்டின், கச்சா முந்திரி உற்பத்தி, 8 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப் பட்டுள்ளது.
தமிழகம்:உள்நாட்டில், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகம் மற்றும் ஒடிசா மாநிலங்களில், அதிக அளவில், முந்திரி உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில், முந்திரி அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது, வரும் மே மாதம் வரை நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டில், முந்திரி சாகுபடி பரப்பளவு, 22 ஆயிரம் ஹெக்டேர் அதிகரித்து, 9.42 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டில், 9.20 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் இருந்தது. இதில், புதிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள, ஜார்க்கண்ட் மற்றும் வட கிழக்கு மாநிலங்களின் சாகுபடி பரப்பளவும் அடங்கும்.தேசிய தோட்டக்கலை முகமை அமைப்பு, விவசாயிகளிடம் முந்திரி சாகுபடி குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சாகுபடி பரப்பளவு:இதையடுத்து, கடந்த 2005-06ம் ஆண்டிற்கு பிறகு, முந்திரி சாகுபடி பரப்பளவு, ஆண்டுதோறும், கூடுதலாக, 22 ஆயிரம் ஹெக்டேர் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில், கச்சா முந்திரி உற்பத்தி, 8 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த 2012ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (6.93 லட்சம் டன்) விட, 15 சதவீதம் அதிகமாகும்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)