பதிவு செய்த நாள்
09 பிப்2013
00:41
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம்,வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை யன்றும் சரிவுடன் முடிவடைந்தது. சில்லரை முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம், தொடர்ந்து ஏழாவது நாளாக சரிவுடன் முடிவடைந்தன.மேலும், இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. அதேசமயம், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொதுத் துறை, உலோகம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், பொறியியல், நுகர்வோர் சாதனங்கள், தகவல் தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 95.55 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,484.77 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,648.07 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,414.80 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சிப்லா, ஹிண்டால்கோ, மாருதி உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், டி.சி.எஸ்., விப்ரோ, எல் அண்டு டி உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 35.30 புள்ளிகள் சரிவுஅடைந்து, 5,903.50 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,953.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,883.65 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|