பதிவு செய்த நாள்
09 பிப்2013
09:24
கார்களில், நவீன மைக்ரோ சிப் பொருத்த, தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், கார்கள் திருட்டு போனாலும் எளிதில் கண்டுபிடித்து விடலாம். சுங்கச் சாவடிகளில் காத்திருக்க வேண்டியதும் இருக்காது. ரேடியோ அதிர்வெண்கள் அடிப்படையில் இயங்கும் இந்த மைக்ரோ சிப்பில், குறிப்பிட்ட அடையாள எண் பதிவாகி இருக்கும். அனைத்து கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் தயாரிக்கும் போதே, இந்த மைக்ரோ சிப்பை பொருத்த வேண்டும். தற்போது, ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களுக்கு, அதன் உரிமையாளர்கள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை சுங்கச்சாவடிகளில் பதிவு செய்து, மைக்ரோ சிப்களை பெற்றுக் கொள்ளலாம்.இதன்மூலம், கார்கள் சுங்கச்சாவடிக்குள் நுழைந்ததுமே, அதன் விபரங்கள் சுங்கச்சாவடி கம்ப்யூட்டரில் தெரிந்துவிடும். நீண்ட வரிசையில் காத்திருக்காமல், உடனுக்குடன் சுங்கத்தை செலுத்தி வெளியேறலாம். ஒருவேளை கார் திருட்டுபோனாலும், அதன் இருப்பிடத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியும். வரும், 2014ம் ஆண்டுக்குள், அனைத்து இலகுரக மற்றும் கனரக வாகனங்களிலும் இந்த, மைக்ரோ சிப்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|