பதிவு செய்த நாள்
11 பிப்2013
01:21
மதுரை:தமிழகத்தில், கடந்தாண்டு உயர்த்தப்பட்ட பத்திரப் பதிவு கட்டணத்தை, விளை நிலங்கள் பகுதியில் குறைக்க, மறு ஆய்வு செய்யுமாறு, பத்திரப்பதிவு அதிகாரிகளுக்கு, உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் 2007 ஆக., 1ல் புதிய வழிகாட்டி மதிப்பை வெளியிட்ட அரசு, "மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைகட்டணம் நிர்ணயிக்கலாம்' என, தெரிவித்தது. ஆனால், அதன் பின் ஐந்து ஆண்டுகளாக கட்டணம் மாற்றி அமைக்காததால், நிலம், கட்டடங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
இந்நிலையில், கடந்தாண்டு புதிய வழிகாட்டி மதிப்பு வெளியிடப்பட்டது. நிலத்தின் மதிப்புஅதிகரித்தது, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதனால், பத்திரப்பதிவு செய்வதும் குறைந்தது. இதற்கிடையே, விளை நிலங்கள் பகுதியில் உள்ள இடத்தின் மதிப்பும் ஒரு சதுரடி ஆயிரக்கணக்கான ரூபாயில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதை, மறு ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான பணியில், அந்தந்த மாவட்ட பதிவாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதன்மூலம், விளை நிலங்கள் அருகேயுள்ள இடங்களின் மதிப்பு குறையும் என, அவர்கள் தெரிவித்தனர். அதேசமயம், எப்போது மறு ஆய்வு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும், என்ற காலக்கெடு நிர்ணயிக்கப்படாததால், கட்டண குறைவு எப்போது அமலுக்கு வரும், என,தெரியவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|