பதிவு செய்த நாள்
13 பிப்2013
09:15
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.07 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 17.99 புள்ளிகள் அதிகரித்து 19579.03 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 9.05 புள்ளிகள் அதிகரித்து 5931.55 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம், நேற்று நன்கு இருந்தது. பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, சில்லரை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு மேற்கொண்டனர். இதையடுத்து, கடந்த, எட்டு நாட்களாக, தொடர் சரிவைச் சந்தித்து வந்த பங்கு வர்த்தகம், நேற்று, ஏற்றத்துடன் முடிவடைந்தது.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடனேயே இருந்தது.நேற்றைய பங்கு வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, மோட்டார் வாகனம், ஆரோக்கிய பராமரிப்பு துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள். அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், ரியல் எஸ்டேட், உலோகம், மின்சாரம், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு, தேவை குறைந்து காணப்பட்டது
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|