பதிவு செய்த நாள்
14 பிப்2013
00:16
புதுடில்லி:சென்ற ஜனவரி மாதத்தில், நாட்டின், ஏற்றுமதி, 2,558 கோடி டாலராக (1.40 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த 2012ம் ஆண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (2,537 கோடி டாலர்/1.39 லட்சம் கோடி ரூபாய்) விட, 0.8 சதவீதம் அதிகம் என, மத்திய வர்த்தக அமைச்சகம்
தெரிவித்துள்ளது.வர்த்தக பற்றாக்குறைஇதே மாதத்தில், நாட்டின் இறக்குமதி, 6.12 சதவீதம் உயர்ந்து, 4,295 கோடி டாலரிலிருந்து (2.50 லட்சம் கோடி ரூபாய்), 4,558 கோடி டாலராக (2.36 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.சென்ற ஜனவரி மாதத்தில், ஏற்றுமதியை காட்டிலும், இறக்கு மதி அதிகரித்துள்ளதால், வர்த்தக பற்றாக்குறை, 2,000 கோடி டாலராக (1.10 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில், வர்த்தக பற்றாக்குறை, 1,760 கோடி டாலராக இருந்தது.இந்தியாவின் அயல்நாட்டு வர்த்தகத்திற்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் முக்கியச் சந்தைகளாகத் திகழ்கின்றன. சர்வதேச பொருளாதார மந்த நிலையால், அந்நாடுகள் பாதிக்கப் பட்டுள்ளன.
இதன் விளைவாக, இந்தியாவின் ஏற்றுமதி, தொடர்ந்து சுணக்கம் கண்டு வருகிறது.கணக்கீட்டு மாதத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 6.91 சதவீதம் உயர்ந்து, 1,487 கோடி டாலரில் (81,785 கோடி ரூபாய்) இருந்து, 1,589 கோடி டாலராக (87,395 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இதர பொருட்கள் இறக்குமதி, 5.7 சதவீதம் அதிகரித்து, 2,808 கோடி டாலரில் (1.54 லட்சம் கோடி ரூபாய்) இருந்து, 2,968 கோடி டாலராக (1.63 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.
பத்து மாதங்களில்...நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், இந்தியாவின் ஏற்றுமதி, 23,968 கோடி டாலராக (13.18 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (25,193 கோடி டாலர்/13.85 லட்சம் கோடி ரூபாய்) விட, 4.86 சதவீதம் குறைவாகும்.இதே காலத்தில், இறக்குமதி, 0.01 சதவீதம் உயர்ந்து, 40,685 கோடி டாலராக (22.37 லட்சம் கோடி ரூபாய்) சற்றே அதிகரித்துள்ளது. இதையடுத்து, வர்த்தக பற்றாக்குறை, 16,718 கோடி டாலராக (9.19 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.கடந்த 2011-12ம் நிதியாண்டின், முதல் 10 மாத காலத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 15,489 கோடி டாலர் (9.19 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.பொறியியல் துறை
சென்ற ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த, 10 மாத காலத்தில், அரிசி, புண்ணாக்கு, தரைவிரிப்பு ஆகியவற்றின் ஏற்றுமதி, சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
அதேசமயம், பொறியியல், ஜவுளி, போன்ற துறைகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 11.56 சதவீதம் உயர்ந்து, 14,042 கோடி டாலரில் (7.72 லட்சம் கோடி ரூபாய்) இருந்து, 15,587 கோடி டாலராக (8.57 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இதர பொருட்கள் இறக்குமதி, 5.17 சதவீதம் அதிகரித்து, 26,643 கோடி டாலரில் (14.65 லட்சம் கோடி ரூபாய்) இருந்து, 28,094 கோடி டாலராக (15.45 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.கச்சா எண்ணெய்இதுகுறித்து, வர்த்தக செயலர் எஸ்.ஆர்.ராவ் கூறியதாவது:நாட்டின், மொத்த இறக்குமதியில், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களுக்கான செலவினமே மிகவும் அதிக அளவில் உள்ளது. இதுவே, வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பிற்கு காரணம். நம் நாட்டின், ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், இனி வரும் மாதங்களில், ஏற்றுமதி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|