பதிவு செய்த நாள்
14 பிப்2013
00:19
புதுடில்லி:ஒற்றை பிராண்டு சில்லரை வர்த்தகத்தில், 750 கோடி ரூபாய் மதிப்பிலான, நான்கு அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.இதன்படி, விளையாட்டு பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், டிகேத்லான் நிறுவனம், 700 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. இது தவிர, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பிரமோத் நிறுவனம், 30 கோடி ரூபாயும், அமெரிக்காவின் பாசில் நிறுவனம், 22 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை, முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது என, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்.ஐ.பி.பீ.,) தெரிவித்துள்ளது.ஒற்றை பிராண்டு சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளும் வகையில், சுவீடனின், ஐ.கே.இ.ஏ., இங்கிலாந்தின் பாவர்ஸ், அமெரிக்காவின் புரூக்ஸ் பிரதர்ஸ் மற்றும் இத்தாலியின் டாமியனி ஆகிய நிறுவனங்களுக்கு, எப்.ஐ.பி.பீ., அண்மையில், அனுமதி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|