அன்னிய நேரடி முதலீடு ரூ.750 கோடி திட்டங்களுக்கு அனுமதிஅன்னிய நேரடி முதலீடு ரூ.750 கோடி திட்டங்களுக்கு அனுமதி ... வருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த கோரிக்கை வருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த கோரிக்கை ...
உரங்களை சிறிய பாக்கெட்டுகளில் விற்க அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2013
00:21

புதுடில்லி:யூரியா அல்லாத இதர உரங்களை, சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து விற்க, மத்திய அரசு, அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து, டை- அம்மோனி யம் பாஸ்பேட் (டீ.ஏ.பி), முரேட் ஆப் பொட்டாஷ் (எம்.ஓ.பி.,), ஆகிய உரங்கள், இனி, 5 கிலோ, 10 கிலோ, 25 கிலோ மற்றும் 40 கிலோ பாக்கெட்டுகளில் கிடைக்கும்.கடந்த, 2011ம் ஆண்டு, ரபி பருவத்திற்கு பிறகு, யூரியா அல்லாத இதர உர வகைகளின் விலை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நாட்டின் பல மாநிலங்களில் உள்ள பல விவசாயிகளால், 50 கிலோ மூட்டையில் அடைக்கப்பட்ட, உரங்களை வாங்க முடியாமல் உள்ளது.இதன் காரணமாக, யூரியா அல்லாத உர வகைகளின் நுகர்வு குறைந்து போயுள்ளதுடன், விவசாயத்தில் உரங்களை பயன்படுத்துவதும் சரிவடைந்து வருகிறது.

இது, உர விற்பனையையும், வேளாண் உற்பத்தியையும், பாதிப்பதாக உள்ளது.இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு, மேற்கண்ட உர வகைகளை, சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய, அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.சிறிய பாக்கெட்டுகளில், உரங்களை அடைத்து விற்பனை செய்யும் நிலையில், விவசாயிகள் தேவையான அளவிற்கு, உரங்களை வாங்கி பயன்படுத்த தொடங்குவர் என்ற, எதிர்பார்ப்பு நிலவுகிறது.கடந்த ஒரு சில ஆண்டுகளில், ஒரு டன் டீ.ஏ.பி., உரத்தின் விலை, 18,200 ரூபாயிலிருந்து, 24 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. எம்.ஓ.பி உரத்தின் விலை, 12 ஆயிரம் ரூபாயிலிருந்து, 17 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.இவை தவிர, ஒரு டன் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் (எஸ்.எஸ்.பி) உரத்தின் விலை, 4,800 ரூபாயிலிருந்து, 7,800 ரூபாயாகவும், காம்ப்ளக்ஸ் உரத்தின் விலை, 16 ஆயிரம் ரூபாயிலிருந்து, 22 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்து உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)