பதிவு செய்த நாள்
14 பிப்2013
00:21
புதுடில்லி:யூரியா அல்லாத இதர உரங்களை, சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து விற்க, மத்திய அரசு, அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து, டை- அம்மோனி யம் பாஸ்பேட் (டீ.ஏ.பி), முரேட் ஆப் பொட்டாஷ் (எம்.ஓ.பி.,), ஆகிய உரங்கள், இனி, 5 கிலோ, 10 கிலோ, 25 கிலோ மற்றும் 40 கிலோ பாக்கெட்டுகளில் கிடைக்கும்.கடந்த, 2011ம் ஆண்டு, ரபி பருவத்திற்கு பிறகு, யூரியா அல்லாத இதர உர வகைகளின் விலை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நாட்டின் பல மாநிலங்களில் உள்ள பல விவசாயிகளால், 50 கிலோ மூட்டையில் அடைக்கப்பட்ட, உரங்களை வாங்க முடியாமல் உள்ளது.இதன் காரணமாக, யூரியா அல்லாத உர வகைகளின் நுகர்வு குறைந்து போயுள்ளதுடன், விவசாயத்தில் உரங்களை பயன்படுத்துவதும் சரிவடைந்து வருகிறது.
இது, உர விற்பனையையும், வேளாண் உற்பத்தியையும், பாதிப்பதாக உள்ளது.இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு, மேற்கண்ட உர வகைகளை, சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய, அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.சிறிய பாக்கெட்டுகளில், உரங்களை அடைத்து விற்பனை செய்யும் நிலையில், விவசாயிகள் தேவையான அளவிற்கு, உரங்களை வாங்கி பயன்படுத்த தொடங்குவர் என்ற, எதிர்பார்ப்பு நிலவுகிறது.கடந்த ஒரு சில ஆண்டுகளில், ஒரு டன் டீ.ஏ.பி., உரத்தின் விலை, 18,200 ரூபாயிலிருந்து, 24 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. எம்.ஓ.பி உரத்தின் விலை, 12 ஆயிரம் ரூபாயிலிருந்து, 17 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.இவை தவிர, ஒரு டன் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் (எஸ்.எஸ்.பி) உரத்தின் விலை, 4,800 ரூபாயிலிருந்து, 7,800 ரூபாயாகவும், காம்ப்ளக்ஸ் உரத்தின் விலை, 16 ஆயிரம் ரூபாயிலிருந்து, 22 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்து உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|