உரங்களை சிறிய பாக்கெட்டுகளில் விற்க அனுமதிஉரங்களை சிறிய பாக்கெட்டுகளில் விற்க அனுமதி ... வருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த கோரிக்கை வருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த கோரிக்கை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
'சென்செக்ஸ்' 47 புள்ளிகள் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2013
00:22

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், புதன் கிழமையன்று நன்கு இருந்தது. சில்லரை முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி, பங்குகளில் முதலீடு மேற்கொண்டதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம், தொடர்ந்து இரண்டாவது நாளாக, ஏற்றத்துடன் முடிவடைந்தது.லூனார் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பெரும்பாலான இதர ஆசியப் பங்குச் சந்தைகளுக்கு, நேற்று விடுமுறையாக இருந்தது. மேலும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.

நேற்றைய வர்த்தகத்தில், மோட்டார் வாகனம், எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், உலோகம், பொறியியல், மின்சாரம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு, முதலீட்டாளர்களிடையே வரவேற்பு குறைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 47.04 புள்ளிகள் அதிகரித்து, 19,608.08 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,723.01 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,574.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 10.45 புள்ளிகள் உயர்ந்து, 5,932.95 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,969.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,922.95 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)