பதிவு செய்த நாள்
14 பிப்2013
00:22
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், புதன் கிழமையன்று நன்கு இருந்தது. சில்லரை முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி, பங்குகளில் முதலீடு மேற்கொண்டதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம், தொடர்ந்து இரண்டாவது நாளாக, ஏற்றத்துடன் முடிவடைந்தது.லூனார் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பெரும்பாலான இதர ஆசியப் பங்குச் சந்தைகளுக்கு, நேற்று விடுமுறையாக இருந்தது. மேலும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.
நேற்றைய வர்த்தகத்தில், மோட்டார் வாகனம், எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், உலோகம், பொறியியல், மின்சாரம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு, முதலீட்டாளர்களிடையே வரவேற்பு குறைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 47.04 புள்ளிகள் அதிகரித்து, 19,608.08 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,723.01 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,574.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 10.45 புள்ளிகள் உயர்ந்து, 5,932.95 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,969.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,922.95 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|