வருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த கோரிக்கைவருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த கோரிக்கை ... தங்கத்தை சுத்திகரிக்க களமிறங்கும் நிறுவனங்கள் தங்கத்தை சுத்திகரிக்க களமிறங்கும் நிறுவனங்கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எல்.ஐ.சி., நிறுவனம்ரூ.14.80 லட்சம் கோடி முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2013
00:30

மும்பை:சென்ற டிசம்பர் மாதம் வரையிலுமாக, லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி.,) நிறுவனம், மேற்கொண்ட முதலீடு, 14.80 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டு, மார்ச் மாதம் வரையிலுமாக இருந்த முதலீட்டை (13.49 லட்சம் கோடி ரூபாய்) விட, 17 சதவீதம் அதிகமாகும்.எல்.ஐ.சி., கடந்த டிசம்பர் மாதம் வரையிலுமாக, அரசு கடன் பத்திரங்களில் மேற்கொண்ட முதலீடு, 7.27 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இதில், மத்திய அரசின் கடன் பத்திரங்களின் பங்களிப்பு, 4.77 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. மீதி தொகை, மாநில அரசுகளின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

குடியிருப்பு மற்றும் அடிப்படை கட்டுமான துறைகளில் மேற்கொண்ட முதலீடு, 1.91 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இதில், மின் துறையை சேர்ந்த, அடிப்படை கட்டுமான துறையின் பங்களிப்பு, 94,294 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இதையடுத்து, நீர்ப்பாசனம், நெடுஞ்சாலை, துறைமுகம், மேம்பாலம், தொலைத்தொடர்பு ஆகிய துறைகள் உள்ளன.எல்.ஐ.சி., நடப்பு நிதியாண்டில், அரசு கடன் பத்திரங்கள், நிறுவன பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில், 2.40 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தது. இதையடுத்து, வரும் 2020ம் ஆண்டில், இதன் தொகுப்பு நிதி, 32 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என, இந்நிறுவனத்தின் தலைவர் டி.கே.மல்கோத்ரா அண்மையில் தெரிவித்திருந்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)