பதிவு செய்த நாள்
14 பிப்2013
00:31
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
கச்சா தங்கத்தை இறக்குமதி செய்வதால், கிடைக்கும் வரி ஆதாயத்தை கருத்தில் கொண்டு, 10க்கு மேற்பட்ட நிறுவனங்கள், கச்சா தங்கத்தை இறக்குமதி செய்து, சுத்திகரிக்கும் தொழிலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.இதையடுத்து, இந்நிறுவனங்கள், கச்சா தங்கத்தை சுத்திகரிப்பு செய்யும் தொழிலுக்கு அனுமதி கோரி, மத்திய அரசுக்கு
விண்ணப்பித்துள்ளன.ஆஸ்திரேலியா இந்த வகையில், தங்கம் சுத்திகரிப்பு துறையில், 900 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு குவிய உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பெரு, ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் எண்ணற்ற ஆப்ரிக்க நாடுகளில் இருந்து கச்சா தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. கச்சா தங்கத்தில், தங்கத்தின் பங்களிப்பு, 95 சதவீதம் வரை இருக்கும்.மத்திய அரசு, நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் நோக்குடன், தங்கம் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன்படி, அண்மையில், இறக்குமதி செய்யப்படும் கச்சா தங்கத்திற்கான வரி, 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டது.அது போன்று, சுத்திகரிக்கப்பட்ட, அதாவது தங்க கட்டிகள் மீதான இறக்குமதி வரி, 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.அதே சமயம், தொழில் துறையில் பின்தங்கிய மாநிலங்கள் அல்லது துறைமுகத்தில் இருந்து தொலை தூரத்தில் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள, தங்க சுத்திகரிப்பு தொழிற்சாலைகளுக்கு, ஒரு சதவீதம் வரிச் சலுகை வழங்கப்படுகிறது.இதன்படி, இந்நிறுவனங்கள், கச்சா தங்கத்தை இறக்குமதி செய்து, சுத்திகரித்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக ஏற்றுமதி செய்யும்போது, ஏற்கெனவே செலுத்திய வரியில், ஒரு சதவீதத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.இந்த சலுகைப்படி, கச்சா தங்கத்திற்கும், சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தை இறக்குமதி செய்வதற்கும் உள்ள வரி வித்தியாசம் 2 சதவீதமாக உயர்ந்துள்ளது.முதலீடு"இத்தகைய ஆதாயத்தை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள தங்க சுத்திகரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி, புதிய நிறுவனங்களும், தங்கம் சுத்திகரிப்பு தொழிலில் முதலீடு மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன' என, தங்கம் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஜேம்ஸ் ஜோஸ் தெரிவித்தார்.இது தொடர்பாக, மத்திய அரசிடம், 10 திட்டங்களுக்கு உரிமம் கோரப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலைகள், ஒட்டுமொத்தமாக, ஆண்டுக்கு 30 டன் தங்கத்தை சுத்திகரிக்கும் திறன் கொண்டவையாக இருக்கும். ஒரு டன் தங்க சுத்திகரிப்பு திறன் கொண்ட தொழிற்சாலை ஒன்றை அமைக்க, சராசரியாக, 30 கோடி ரூபாய் தேவைப்படும். இதன்படி, இத்துறையில் மேற்கண்ட திட்டங்கள் மூலம், 900 கோடி ரூபாய் முதலீடு குவிய உள்ளது என, ஜேம்ஸ் ஜோஸ் மேலும் கூறினார்.இந்தியாவில், பல தங்க நகை நிறுவனங்களுக்குச் சொந்தமாக தங்க சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. இவை, பல ஆண்டுகளாக, அதிக ஆதாயமற்ற கச்சா தங்கத்தை இறக்குமதி செய்யாமல், உள்நாட்டில் கிடைக்கும் பழைய நகைகளை உருக்கும் பணியில், 35-40 சதவீத உற்பத்தி திறனில் செயல்பட்டு வருகின்றன.
சென்ற, 2012ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, இந்தியாவில், இத்தகைய நிறுவனங்களின் தங்கம் சுத்திகரிப்பு திறன், 500 டன்னாக உள்ளது. அதே சமயம், இந்தியாவில், ஓராண்டில் தங்கத்திற்கான தேவை, 950 டன்னாக உள்ளது.இறக்குமதி வரிநடப்பு 2012-13ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், அப்போது நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தங்கம் இறக்கு மதிக்கு இருவேறு வரி விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.இதையடுத்து, தங்கம் சுத்தி
கரிப்பு துறையில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன.சென்ற ஆண்டு, இத்துறையில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களின் கீழ், உற்பத்தி துவங்கப்பட்டது.எம்.டீ.,ஓவர்சீஸ், கெம்கா இண்டர்நேஷனல், ஸவேரி ரிபைனரீஸ், பெங்களூர் ரிபைனரீஸ் ஆகியவை, கடந்த ஆண்டு, உற்பத்தியை துவக்கியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|