தங்கத்தை சுத்திகரிக்க களமிறங்கும் நிறுவனங்கள்தங்கத்தை சுத்திகரிக்க களமிறங்கும் நிறுவனங்கள் ... தமிழகத்தில் அரிசி விலை உயர்வால் மாவு வகைகளின் விலையும் கிடு கிடு தமிழகத்தில் அரிசி விலை உயர்வால் மாவு வகைகளின் விலையும் கிடு கிடு ...
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2013
08:39

புதுடில்லி : பெட்ரோல் விலையை, லிட்டருக்கு, 1 ரூபாயும், டீசல் விலையை, லிட்டருக்கு, 50 காசுகளும், உயர்த்த, பொது துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு, இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகலாம்.
சர்வ தேச சந்தை நிலவரத்து ஏற்ப, உள்நாட்டில், பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை, பொது துறை எண்ணெய் நிறுவனங்களான, இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவற்றுக்கு, மத்திய அரசு, ஏற்கனவே வழங்கியுள்ளது.இதை தொடர்ந்து, டீசல் விலையையும், குறிப்பிட்ட கால இடைவெளியில், சிறிய அளவில் உயர்த்தி கொள்ள, பொது துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, டிசம்பரில், மத்திய அரசு, அனுமதி வழங்கியது. சமீப காலமாக, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1 லிட்டர் பெட்ரோலுக்கு, 1 ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்த இழப்பை ஈடு செய்யும் வகையில், பெட்ரோல் விலையை, லிட்டருக்கு, 1 ரூபாயும், டீசல் விலையை, லிட்டருக்கு, 50 காசுகளும் உயர்த்த, எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இதுகுறித்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர், ஆர்.எஸ்.புடலோ கூறியதாவது:சர்வ தேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, அதிகரித்துள்ளது. இதனால், பொது துறை எண்ணெய் நிறுவனங்கள், கடும் இழப்பை சந்திக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை உயர்த்த, திட்டமிடப்பட்டுள்ளது.சர்வ தேச சந்தை நிலவரம் குறித்து, இம்மாதம், 15ம் தேதி, ஆலோசனை நடக்கவுள்ளது. அப்போது, விலையை உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும். விலை உயர்வு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை, தற்போது தெரிவிக்க முடியாது.இவ்வாறு, புடேலா கூறினார்.
இதையடுத்து, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்னும், ஒரு சில தினங்களில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)