பதிவு செய்த நாள்
14 பிப்2013
09:13
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 19.71 புள்ளிகள் அதிகரித்து 19627.79 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 0.30 புள்ளிகள் அதிகரித்து 5933.25 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று நன்கு இருந்தது. சில்லரை முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி, பங்குகளில் முதலீடு மேற்கொண்டதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம், தொடர்ந்து இரண்டாவது நாளாக, ஏற்றத்துடன் முடிவடைந்தது.லூனார் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பெரும்பாலான இதர ஆசியப் பங்குச் சந்தைகளுக்கு, நேற்று விடுமுறையாக இருந்தது. மேலும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|