பதிவு செய்த நாள்
15 பிப்2013
00:05
கொச்சி:வரத்து அதிகரிப்பால், கொப்பரை மற்றும் தேங்காய் எண்ணெய் விலை, சரிவை கண்டு வருகிறது.மத்திய அரசு, நாட்டின் அனைத்து துறைமுகங்கள் வாயிலாகவும், தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி மேற்கொள்ள அனுமதி வழங்கியது.
ஆதரவு விலை:இதையடுத்து, இதன் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, தேங்காய் எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டு வருவது, இத்துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.அண்மையில், மத்திய அரசு, ஒரு குவிண்டால் கொப்பரை கொள்முதலுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை, கூடுதலாக, 150 ரூபாய் உயர்த்தியது.
இந்நிலையிலும், கடந்த ஒரு வாரமாக, தமிழகம் மற்றும் கேரளாவில், கொப்பரை மற்றும் தேங்காய் எண் ணெய் விலை குறைந்து வருகிறது.கேரளாவில், ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் விலை, 70 ரூபாயிலி ருந்து, 67 ரூபாயாக சரிவடைந்துள்ளது. தமிழகத்தில், இதன் விலை, 67 ரூபாயிலிருந்து, 64 ரூபாயாக குறைந்துள்ளது.இதே போன்று, கேரளாவில், ஒரு குவிண்டால் கொப்பரை விலை, 4,800 ரூபாயிலிருந்து, 4,700 ரூபாயாகவும், தமிழகத்தில், 4,600 ரூபாயிலிருந்து, 4,500 ரூபாயாகவும் சரிவடைந்துள்ளது.
இந்நிலையில், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து, கொப்பரை வரத்து அதிகரிக்கும் என்ற நிலைப்பாட்டால், விவசாயிகள், கையிருப்பில் உள்ள கொப்பரையை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாகவே, தேங்காய் எண்ணெய் மற்றும் கொப்பரையின் விலை தொடர் சரிவை கண்டு வருகிறது என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
பாமாயில்:இதே போன்று, ஒரு கிலோ பாமாயில் விலை, 54 ரூபாயிலிருந்து, 52 ரூபாயாகவும், எண்ணெய் பனை பருப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயின் விலை, 56 ரூபாயிலிருந்து, 53 ரூபாயாகவும் சரிவை கண்டுள்ளன.கொப்பரை மற்றும் தேங்காய் எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதை தடுக்க, மத்திய அரசு, கொப்பரைக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை, மேலும் உயர்த்த வேண்டும் என, தென்னை விவசாயிகள், கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மத்திய அரசு, கொப்பரை கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியது போதுமா னதாக இல்லை. இதனை, குவிண்டாலுக்கு, 500 ரூபாய் என்ற அளவில் உயர்த்த வேண்டும் என, கொச்சி எண்ணெய் வியாபாரிகள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் பிரகாஷ் பீ.ராவ் தெரிவித்தார்.
இதுகுறித்து தேங்காய் மேம்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, கடந்த நிதிஆண்டை காட்டிலும், நடப்பு நிதியாண்டில், கொப்பரை கொள் முதலுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை சிறிதளவே உயர்த்தியுள்ளது.
முயற்சி:குறிப்பாக, எண்ணெய் தயாரிப்பிற்கான கொப்பரையின் குறைந்தபட்ச ஆதரவு விலை, கடந்த நிதியாண்டை காட்டிலும், தற்போது, 2.94 சதவீத அளவிற்கும், முழு கொப்பரைக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை, 2.80 சதவீத அளவிற்குமே உயர்த்தப்பட்டு உள்ளன.விவசாயிகளின் நலன் கருதி, மதிப்பு கூட்டப்பட்ட தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பொருட்களின் விலையை உயர்த்த, பல்வேறு முயற்சிகளை வாரியம் மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|