பதிவு செய்த நாள்
15 பிப்2013
09:35
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்க நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 178.94 புள்ளிகள் அதிகரித்து 19676.12 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 66.35 புள்ளிகள் குறைந்து 5830.60 புள்ளிகளோடு காணப் பட்டது.நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் மந்தமாகவே காணப்பட்டது. இருப்பினும், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் நன்கு இருந்தது. நேற்றைய வர்த்தகத்தில், பொறியியல், எண்ணெய், எரிவாயு, மின்சாரம், மோட்டார் வாகனம் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்பொருட்கள், உலோகம், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|