கோல் இந்தியா: நிலக்கரி உற்பத்தி 35.50 கோடி டன்கோல் இந்தியா: நிலக்கரி உற்பத்தி 35.50 கோடி டன் ... "வெளிப்படையான பட்ஜெட்' இந்தியாவிற்கு 14வது இடம் "வெளிப்படையான பட்ஜெட்' இந்தியாவிற்கு 14வது இடம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை நீக்க திட்டம்: தாமஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2013
00:08

புதுடில்லி:சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து, அடுத்த, 15 தினங்களுக்குள் முடிவெடுக்கப்படும் என, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்தார்.
பரிந்துரை:பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு, கடந்த அக்டோபர் மாதம், சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை நீக்கும் வகையில், அரசுக்கு,
பரிந்துரை செய்திருந்தது.இதன் அடிப்படையில், சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து, கூடிய விரைவில் முடிவெடுக்கப்படும் என, அமைச்சர் தாமஸ் குறிப்பிட்டார்.
தற்போது, உள்நாட்டில் செயல்படும் சர்க்கரை ஆலைகள், உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை மற்றும் வினியோகத்தில், மத்திய அரசு, கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.ஆலைகள் உற்பத்தி செய்யும் மொத்த சர்க்கரையில், குறிப்பிட்ட சதவீத அளவிற்கு மட்டுமே, வெளிச் சந்தையில் விற்க முடியும்.
பொது வினியோகம்:மேலும், இந்நிறுவனங்கள், அவற்றின் மொத்த சர்க்கரை உற்பத்தியில், 10 சதவீதத்தை, மத்திய அரசின் பொது வினியோக திட்டத்திற்காக, ஒரு கிலோ, 20 ரூபாய் என்ற அளவில் அளிக்க வேண்டும். இந்த சர்க்கரை, ரேஷன் கடைகள் வாயிலாக, ஒரு கிலோ, 13.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, சர்க்கரை மீதான கட்டுப்பாடு நீக்கப்படும் நிலையில், 80 ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்ட இத்துறை நிறுவனங்கள், உற்பத்தியாகும் சர்க்கரையை எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல், வெளிச் சந்தையில் விற்பனை செய்து கொள்ள முடியும். இதனால், சர்க்கரை நிறுவனங்களின் செயல்பாடு, நன்கு அமையும் என்பதுடன்,
விவசாயிகளுக்கும், தங்கு தடையில்லாமல், கரும்பிற்கான தொகையை வழங்க முடியும்.
உத்தர பிரதேசம்:இந்நிலையில், இந்த கட்டுப்பாட்டை விலக்குவது குறித்து, கரும்பு மற்றும் சர்க்கரை அதிகளவில் உற்பத்தியாகும், 12 மாநில அரசுகளின் கருத்தை தெரிவிக்கும்படி மத்திய அரசு, கேட்டுக் கொண்டது. பத்து மாநிலங்கள் கட்டுப்பாடு விலக்கல் குறித்து, தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளன. ஆனால், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அவற்றின் கருத்தை தெரிவிக்க வில்லை என, தாமஸ் மேலும் குறிப்பிட்டார்.
உற்பத்தி:இந்நிலையில், நடப்பு பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.43 கோடி டன்னாக இருக்கும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) மறு மதிப்பீடு செய்துள்ளது. இது, முதல் மதிப்பீட்டை விட, அதிகமாகும்.கடந்த 2011-12ம் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.60 கோடி டன் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. அதேசமயம், உள்நாட்டில், இதன் பயன்பாடு, 2.20 கோடி டன்னாக இருந்தது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)