பதிவு செய்த நாள்
16 பிப்2013
00:12
மும்பை:நாட்டின் பங்கு வியாõபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்றும், ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால், முதலீட்டாளர்கள், பங்குகளில், முதலீடு மேற்கொள்வதை வெகுவாக குறைத்து கொண்டனர்.இதையடுத்து, நடப்பாண்டில், இதுவரையில்லாத அளவிற்கு, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், சரிவுடன் முடிவடைந்தது.
மேலும், யூரோ நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சுணக்கம் கண்டுள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், வங்கி, நுகர் பொருட்கள், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது. அதேசமயம், எண்ணெய், எரிவாயு, ஆரோக்கிய பராமரிப்பு, தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 29.03 புள்ளிகள் சரிவடைந்து, 19,468.15 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,512.89 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,381.82 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாக்டர் ரெட்டீஸ், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை சரிவுஅடைந்தும், டாட்டா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 9.55 புள்ளிகள் குறைந்து, 5,887.40 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,899.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,853.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|